Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

நீங்களே செய்யலாம்- கூழாங்கல் ஆமை

தேவையான பொருட்கள்:

ஒரு பெரிய கூழாங்கல் மற்றும் ஆறு சிறிய கூழாங்கற்கள், பெயிண்ட், பசை மற்றும் கெட்டி அட்டை.

செய்முறை:

1. சோப்புத் தண்ணீரில் கூழாங்கற்களை கழுவிக்கொள்ளவும். வெயிலில் நன்கு காயவைக்கவும்.

2. பெரிய கூழாங்கல்லுக்குப் பச்சை வண்ணம் பூசவும். சிறிய கூழாங்கற்களுக்குப் பிரவுன் வண்ணம் பூசவும்.

3. பச்சை மற்றும் பிரவுன் வண்ணங்களைச் சேர்த்து பெரிய கூழாங்கல்லில் குட்டிக்குட்டி வட்டங்களை வரையவும்.

4. நீங்கள் விரும்பிய வண்ணத்தை எடுத்து கெட்டி அட்டையில் அடியுங்கள். பெரிய கூழாங்கல்லை எடுத்து அட்டையின் நடுவில் ஒட்டுங்கள். ஆமையின் தலைக்கு சிறிய கூழாங்கல் ஒன்றை எடுத்துப் பொருத்துங்கள். அத்துடன் கால் மற்றும் வாலுக்கும் மீதியிருக்கும் ஐந்து சிறிய கூழாங்கற்களை ஒட்டுங்கள்.

5. ஆமையின் தலையில் இரண்டு கண்களை வரைந்துகொள்ளுங்கள்

மொழுமொழுவென்ற ஆமை உருவாகிவிடும். இதை உங்கள் நண்பர்களுக்குப் பரிசளித்து மகிழுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x