Last Updated : 22 Jun, 2016 12:05 PM

 

Published : 22 Jun 2016 12:05 PM
Last Updated : 22 Jun 2016 12:05 PM

மேஜிக்... மேஜிக்...- பிரிந்த மணிகள் சேர்ந்த மாயம்

சிறுமிகள் ஆசையாகக் கழுத்தில் அணிந்துகொள்ளும் மணி மாலையை வைத்து மேஜிக் செய்யலாம் தெரியுமா? அதை எப்படிச் செய்வது என பார்க்கிறீர்களா?

தேவையான பொருட்கள் :

ஒரே மாதிரியான மணி மாலை - 2

கண்ணாடி டம்ளர் - 2

காகிதப் பை - 2 (ஒன்று சிறியது)

பசை, கத்தரிக்கோல்

மேஜிக் எப்படிச் செய்வது?

மேஜிக் செய்வதற்கு முன்பு முன் தயாரிப்பில் ஈடுபட வேண்டும்.

1. முதலில் பெரிய காகிதப் பையை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பைக்குள் முழு மணிமாலையைப் போடுங்கள்.

2. அந்தப் பைக்குள் சிறிய காகிதப் பையைப் படத்தில் காட்டியபடி பக்கவாட்டில் ஒட்டிக்கொள்ளுங்கள். இப்போது இந்தப் பையில் எதுவுமில்லை என்பதைப் போலப் பார்வையாளர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள்.

3. பின்னர் மணி மாலை ஒன்றை எடுத்துக் காட்டி, அதைக் கத்தரித்து மணிகளை உதிரியாகப் பிரியுங்கள். அதை ஒரு கண்ணாடி டம்ளரில் போட்டு டீயை ஆற்றுவதுப் போல ஆற்றுங்கள். மணிகளைச் சிறிய காகிதப் பையில் கொட்டி, வாய்ப் பகுதியை மடித்து ஒட்டிவிடுங்கள்.

4. மேஜிக் பாருங்கள்... மாயம் இல்லை; மந்திரம் இல்லை என்று சொல்லியபடி பையின் உள்ளே கையை விடுங்கள். சிறிய பையின் அடிப்பாகத்தைப் படத்தில் காட்டியபடி விரல்களால் கிழியுங்கள். உள்ளே ஏற்கெனவே இருக்கும் முழுமையான கோர்த்த மணிமாலையை எடுத்து உயர்த்திக் காட்டுங்கள்.

இந்த மேஜிக் உங்கள் நண்பர்களை வியப்பில் ஆழ்த்தும். மேஜிக்கை ஒருமுறைக்கு இருமுறை செய்து பார்த்த. பிறகு நண்பர்களிடம் செய்துகாட்டுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x