Published : 25 Feb 2014 12:00 AM
Last Updated : 25 Feb 2014 12:00 AM

10, 12-ம் வகுப்பு தேர்வுகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், இயக்குநர்கள் நியமனம்- தமிழக அரசு உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அளவில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது:

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கவுள்ள 10-ம், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க கீழ்க்கண்ட அதிகாரி கள் குறிப்பிட்ட மாவட்டங் களுக்கு நியமிக்கப் படுகின்றனர். தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் என்.மகேஸ்வரன் ஐஏஎஸ் – சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள், அரசு துணைச் செய

லாளர் எஸ்.பழனிச்சாமி ஐஏஎஸ் – கன்னியாகுமரி, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் – சென்னை, பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் – காஞ்சிபுரம், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் – திருவள்ளூர், ஆர்.எம்.எஸ்.ஏ. மாநில திட்ட இயக்குநர் எஸ்.சங்கர் – விழுப்புரம், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை – கடலூர், பாடநூல் கழக செயலாளர் எஸ்.அன்பழகன் – வேலூர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் – ஈரோடு, திருப்பூர்

இணை இயக்குநர்கள் தர்ம.ராஜேந்திரன் – கோவை, நீலகிரி, ஏ.கருப்பசாமி – திருச்சி, புதுக்கோட்டை, எம்.பழனிச்சாமி – திருநெல்வேலி, செ.கார்மேகம் – திருவண்ணாமலை, எஸ்.உமா – நாமக்கல், என்.லதா – பெரம்பலூர், சி.செல்வராஜ் – தஞ்சாவூர், திருவாரூர், வி.பாலமுருகன் – தர்மபுரி, சி.உஷாராணி – கரூர், பி.குப்புசாமி – தூத்துக்குடி, கே.சசிகலா – அரியலூர், எஸ்.நாகராஜமுருகன் – மதுரை, தேனி, பி.ஏ.நரேஷ் – விருதுநகர், எஸ்.செல்லம் – திண்டுக்கல், சுகன்யா – கிருஷ்ணகிரி, கே.ஸ்ரீதேவி – சேலம், ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர் எஸ்.சேதுராம வர்மா – நாகப்பட்டினம்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x