Published : 19 Sep 2013 04:53 PM
Last Updated : 19 Sep 2013 04:53 PM

10வது, பிளஸ்-2 துணை தேர்வுக்கு ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்புக்கும், பிளஸ்-2 க்கும் துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் தேர்வுத்துறையின் இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை டவுண்லோட் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

துணை பொதுத்தேர்வுகள்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2, தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்களின் படிப்பு காலம் வீணாகாமல் இருப்பதற்காக தமிழக அரசால் துணை பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பத்தாம் வகுப்புக்கான துணை பொதுத்தேர்வு வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. அக்டோபர் 1-ந்தேதி வரை நடக்கிறது. பிளஸ்-2 க்கான துணை பொதுத்தேர்வு 23-ந்தேதி ஆரம்பிக்கிறது. அக்டோபர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

சிறப்பு துணை பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) அதனை டவுண்லோட் செய்துகொள்ளலாம்.

முதல்முறையாக ஆன்லைன் முறை

தேர்வுகள் தொடங்கும் தேதியான 23-ந்தேதி வரை ஹால் டிக்கெட்டை பெறலாம். யாருக்கும் தபால் மூலம் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்படாது.

சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பித்தவர்கள் 21, 22-ந்தேதிகளில் ஆன்லைனில் ஹால் டிக்கெட்டை டவுண்லோட் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் தற்போதுதான் முதல்முறையாக ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x