Last Updated : 04 Mar, 2014 12:10 PM

 

Published : 04 Mar 2014 12:10 PM
Last Updated : 04 Mar 2014 12:10 PM

விருக்ஷாசனம் (மரம் போல் நிற்கும் நிலை)

விருக்ஷ என்றால் மரம் என்று பொருள். மரம் போல் நிற்கும் நிலையே விருக்ஷாசனம்.

ஆசனத்தின் படிநிலைகள்

# ஒற்றைக் காலில் நின்றபடி கைகள் இரண்டையும் மேலே தூக்கிக் காதுகளை ஒட்டி கூப்பிக்கொள்ள வேண்டும்.

# நிற்கும் கால் நிலையாக, நேராக இருக்க வேண்டும்.

# நிற்கும் காலின் தொடை மீது மடித்துவைக்கப்பட்ட கால் பாதம் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.

# மடித்துவைக்கப்பட்ட கால் பாதம், நிற்கும் காலின் மீது முழுமையாகப் படிந்திருக்க வேண்டும்.

# மடித்துவைக்கப்பட்ட கால் 90 டிகிரி அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும்.

# மடித்துவைக்கப்பட்ட காலின் தொடைக்கும் குதிகாலுக்கும் இடையில் இடைவெளி இல்லாத நிலையே ஆகச் சிறந்த நிலை.

ஆசனம் தரும் பலன்கள்:

# கால்களின் வலிமையையும் தாங்கும் திறனையும் கூட்டுகிறது.

# பாதங்களின் இணைப்புகள், ஜவ்வுகளுக்கும் திசுக்களுக்கும் வலிமை ஊட்டுகிறது.

# இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்துவந்தால் பாதம் முதல் முதுகெலும்பு வரையில் முழு காலுக்கும் வலிமை கூடும்.

# காலின் வடிவத்தில் அழகு கூடும்.

# இடுப்புப் பகுதியின் ஸ்திரத்தன்மையைக் கூட்ட உதவும்.

# இடுப்பெலும்புகளின் வலிமை கூடும்.

# விருக்ஷாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, தடுமாற்றத்தைப் போக்குகிறது.

# கவனக் குவிப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது.

# தொடர்ந்து செய்துவந்தால் மனதின் தடுமாற்றங்களும் பதற்றங்களும் குறைந்து மனச் சமநிலை கிடைக்கும். படிப்படியாக நம் வாழ்விலும் சமநிலை கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x