Last Updated : 24 Feb, 2014 11:55 AM

 

Published : 24 Feb 2014 11:55 AM
Last Updated : 24 Feb 2014 11:55 AM

வீண் குழப்பம் வேண்டாம்

பிளஸ் டூ தேர்வுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இந்த நேரத்தில் நன்றாகப் படிக்கும் சிலருக்கும்கூட, எல்லாவற்றையும் படித்து விட்டோமா? குறிப்பிட்ட பாடத்திலிருந்து முக்கியமான கேள்விகள் கேட்டுவிட்டால், நம்மால் பதில் அளிக்க முடியாதே, எல்லாவற்றையும் படித்தாகிவிட்டது, ஆனால் ஒரே குழப்பமாக இருக்கிறதே. பரீட்சை ஹாலில் பதில் மறந்து போய்விட்டால் என்ன செய்வது என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் எழும்.

தேர்வு நெருங்கும் இந்த நேரத்தில் எதைப் பற்றியும் குழப்பிக்கொள்ளாமல், சகஜமான மனநிலையில் இருந்தாலே நிறைய மதிப்பெண்களைப் பெற்றுவிட முடியும். இந்தக் கடைசிக் கட்டத்தில் தேர்வுக்கு எப்படித் தயாராவது என்பது குறித்துச் சில யோசனைகள்:

தேர்வுக்கு முந்தைய தயாரிப்பு

l தேர்வுக்குக் குறைந்தது பத்து நாட்களுக்கு முன்பாகவே அனைத்துப் பாடங்களையும் படித்துவிடுவது நல்லது.

l நமக்கு எந்தப் பாடம் பிடிக்குமோ, அந்தப் பாடத்தை முதலில் படித்தால் தன்னம்பிக்கை பிறக்கும்

l பதற்றம், கோபம் இல்லாமல் படிக்க வேண்டும். அப்போதுதான் மனதில் நிற்கும்

l தேர்வு நேரங்களில் கிரிக்கெட் போன்ற விளை யாட்டுகள், டி.வி. பார்ப்பது போன்றவற்றைச் சில நாட்களுக்காவது ஒதுக்கி வைத்துப் பாடத்தில் கவனம் செலுத்தினால் நிறைய மதிப்பெண்கள் பெறலாம்

l தேர்வுக்கு முந்தைய பத்து நாட்கள் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்

l தேர்வுக்கு வேண்டிய நுழைவுச் சீட்டுகள், எழுது பொருட்கள் போன்ற கருவிகளை ஒரே இடத்தில் சேகரித்து வைக்கவும்

l தேர்வு நேரத்தில் உடல்நிலையை நன்றாக வைத்திருக்க வேண்டும். தேர்வு நாட்களில் ஜுரம், தலைவலி போன்றவை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

l தொடர்ந்து படிக்கும் நேரங்களில் அவ்வப்போது தேநீர், பிஸ்கெட், வெள்ளரிக் காய், பேரீச்சம் பழம் போன்ற உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்

l வெயில் காலம் நெருங்குவதால் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்

தேர்வுக்குத் தயாராகும் முறை

l மொத்தமாகப் பாடங் களைப் படிப்பது நல்லதல்ல. பல்வேறு பகுதிகளாகப் பிரித்துப் படித்தால் மனதில் தங்கிவிடும்

l தினசரி குறிப்பிட்ட நேரம் படிக்கும் வழக்கத்தைக் கொண்டுவர வேண்டும்

l ஒரு மணி நேரம் படித்தால் 15 நிமிடங்கள் இடைவெளி விட வேண்டும்

l படித்ததை எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு முறை எழுதினால் 16 முறை படித்ததற்குச் சமம்

l பாடங்களைத் திரும்பப் படிக்க அட்டவணை தயார் செய்ய வேண்டும். அதைத் தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தயார் செய்வது நல்லது. இல்லாவிட்டாலும் இப்போது செய்யலாம்.

l ஒவ்வொரு பாடத்திற்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். நன்றாகப் படித்த பாடங்களுக்குக் குறைந்த நேரம், அதிகம் படிக்காத பாடங்களுக்கு அதிக நேரம் என்று ஒதுக்க வேண்டும்

l கணக்கு, வரைபடங்கள் ஆகியவற்றுக்குத் தினசரி நேரம் ஒதுக்குவது நல்லது

l மதிப்பெண் வாரியாகப் பாடத்தைப் பிரித்துப் படிக்க வேண்டும். முதலில் அதிக மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள், கடைசியாக ஒரு வார்த்தை மதிப்பெண்கள் என்று படிக்க வேண்டும்

l படிப்புக்கு மத்தியில் நமக்குப் பிடித்த காரியங் களைச் செய்யக் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் பரீட்சை பதற்றம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்

l தேர்வுக்குத் தயார் செய்யும் நேரத்தில் தியானம் செய்வது அல்லது பிடித்த விளையாட்டுகளை விளையாடுவது பதற்றத்தைத் தணிக்க உதவும்

தேர்வு சமயத்தில்

l தேர்வுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரத் திற்கு முன்னதாகவே படித்து முடித்துவிட வேண்டும்

l தேர்வுக்கு முந்தைய அரை மணிநேரத்தில் எதையும் படிக்க வேண்டாம்

l தேவையான அனைத்தும் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த பின் அறைக்குள் நுழைய வேண்டும்

l ஒரு மதிப்பெண்களுக்கான பதில்களை முதலில் எழுதி விட வேண்டும்.

l பிறகு தெரிந்த பதில்களை எழுத வேண்டும். தெரிந்த பதில்கள் எழுதுவதைத் தள்ளிப் போட வேண்டாம்

l கடைசி நேரத்தில் தெரியாத பதில்களை எழுதலாம். ஆனால் மனதில் பதற்றம் வேண்டாம்

l தேர்வு முடிவதற்கு இரண்டு நிமிடங்கள் முன்ன தாகவே எழுதுவதை நிறுத்திவிட வேண்டும்

l அமைதியாக மனதைச் செலுத்திப் படியுங்கள், உங்கள் முயற்சிக்குத் தக்க பலன் கிடைக்கும். வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x