Last Updated : 04 Dec, 2013 12:00 AM

 

Published : 04 Dec 2013 12:00 AM
Last Updated : 04 Dec 2013 12:00 AM

முகம் காட்ட மறுத்த நிலா

1.பூமிக்கு அருகேயுள்ள நட்சத்திரம் ஒன்றிலிருந்து நம்மை வந்தடையும் ஒளி, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து வீச ஆரம்பித்ததாக இருக்கும். அது நம்மை வந்து சேர்வதற்குள் இத்தனை ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. இப்போது நம்மிடம் உள்ள ராக்கெட்களின் வேகத்தை வைத்துப் பார்த்தால், நமக்கு மிகவும் அருகிலுள்ள ஒரு நட்சத்திரத்தைச் சென்று தொட்டுவிட்டுத் திரும்புவதற்கு மட்டும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்.

2.விண்ணிலிருந்து பூமியை நோக்கி வரும் விண்கற்கள், வளிமண்டலத்திலேயே உரசித் தீப்பிடித்துச் சாம்பலாகி, பின்னர் வடிகட்டப்பட்டுப் பூமியை வந்தடைகின்றன. இந்தத் தூசுத் துகள்கள் மூலம் ஒவ்வொரு நாளும் பூமியின் எடை 25 டன்னும் (1 டன் = ஆயிரம் கிலோ), ஆண்டுக்கு 9,125 டன்னும் அதிகரிக்கிறது.

3.சூரியக் குடும்பத்தில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய கோள் சனி. இது பூமியைவிட 95 மடங்கு எடை மிகுந்தது. சனிக் கிரகத்தை ஒரு பாத்திரம் என்று வைத்துக் கொண்டால், அதற்குள் 744 பூமிகளை உள்ளே வைக்க முடியும்.

4.விண்வெளிக்குப் போன முதல் உயிரினம் மனிதனல்ல, ஒரு நாய். அதன் பெயர் லைகா. 1957இல் ரஷ்யா அனுப்பிய விண்கலத்தில் சோதனை உயிரினமாக அது அனுப்பி வைக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக விண்கலத்துக்குள் இருந்த ஆக்சிஜன் தீர்ந்துபோன நிலையில், அது இறந்து போனது.

5.நிலவு 27 நாட்களுக்கு ஒரு முறை பூமியைச் சுற்றி வருகிறது. அதேநேரம் இப்படிச் சுற்றி வரும்போது, அது தன் ஒரு பக்கத்தை மட்டும்தான் பூமிக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. நிலவின் மறுபக்கத்தை முதன்முறையாக 1959இல்தான் பார்க்க முடிந்தது. அப்போது ரஷ்யாவின் லூனா 3 என்ற விண்கலம் முதன்முறையாக நிலவின் மறுபக்கத்தை போட்டோ எடுத்து அனுப்பியதால், அது சாத்தியமானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x