Published : 14 Sep 2013 03:06 AM
Last Updated : 14 Sep 2013 03:06 AM

செப். 20 முதல் எம்.பி.பி.எஸ். இறுதிக் கட்ட கலந்தாய்வு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை இறுதிக் கட்ட கலந்தாய்வு இம்மாதம் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் இறுதிக் கட்ட கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து 23-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இதுவரை இரண்டு கட்ட கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் நடத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x