Published : 24 Sep 2018 11:17 AM
Last Updated : 24 Sep 2018 11:17 AM

`பீட்டில்’ உற்பத்தியை நிறுத்துகிறது ஃபோக்ஸ்வேகன்

போக்ஸ்வேகன் மாடலில் மிகவும் பிரபலமானது பீட்டில். ஏறக்குறைய 80 ஆண்டுகளாக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தது இந்த கார்.  அடால்ஃப் ஹிட்லரின் அபிமான காரும் இதுவே. இந்த கார் உற்பத்தியை 2019-ல் நிறுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் உருவாக்கப்பட்டு 80 ஆண்டுகள் ஆவதை ஒட்டி இரண்டு சிறப்பு கார்களை தயாரித்துவிட்டு உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஃபோக்ஸ்வேகனின் மெக்ஸிகோ ஆலையில் சிறப்பு எடிசன் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன.

இந்த காரின் மூன்றாம் தலைமுறை எடிசன் 2011-ம் ஆண்டில் வெளியிடப்பட் டது. இறுதியாக தயாரிக்கப்பட உள்ள கார்கள் பிரத்யேக வண்ணத்தில் சிறப்பு தன்மைகளுடன் வெளிவரும். கடந்த சில ஆண்டுகளாக பீட்டில் உற்பத்தி பெரும் வரவேற்பைப் பெறவில்லை. மூன்றாம் தலைமுறை கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகாததால் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துவிட்டதாக நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஹின்ரிச் வூபெகன் தெரிவித்துள்ளார்.

பீட்டில் கார் மாடல் உருவாக்கம் 1930-ல் தொடங்கியது. ஆனால் உற்பத்தி 1938-ல் ஆரம்பமானது. 2003-ம் ஆண்டு வரை இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்தியாவில் 2009-ம் ஆண்டு ஃபோக்ஸ்வேகன் பீட்டில் காரை அறிமுகப்படுத்தியது. இதன் மேம்படுத்தப்பட்ட மாடல் 2015-ல் சந்தைக்கு வந்தது. இந்த மாடல் கார் 150 ஹெச்பி, 1.4 லிட்டர் மோட்டார், 7 ஸ்பீடு டியூயல் கிளட்ச் வசதியுடன் வந்தது. 2018 பிப்ரவரி மாதமே இந்தியாவில் பீட்டில் விற்பனை நிறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x