Published : 12 Mar 2018 11:39 AM
Last Updated : 12 Mar 2018 11:39 AM

இந்தியாவில் மாக்ஸிஸ் டயர் ஆலை

சர்வதேச அளவில் பிரபலமான தாய்வானைச் சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனம் தனது டயர் உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைத்துள்ளது. குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் 106 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் மாக்ஸிஸ் நிறுவனம் ரூ. 2,640 கோடி முதலீடு செய்துள்ளது.

முதல் கட்டமாக இரு சக்கர வாகனங்களுக்கான டயர் மற்றும் டியூப்களைத் தயாரிக்க உள்ளது. இங்கு நாளொன்றுக்கு 20 ஆயிரம் டயர்களையும், 40 ஆயிரம் டியூப்களையும் தயாரிக்க முடியும். ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களுக்கான டயர், டியூப்களை இந்நிறுவனம்தான் தயாரித்து அளிக்கிறது. தற்போது இந்த ஆலையில் 600 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக விரிவாக்கம் செய்யப்படும்போது இதில் 2,000 பேர் பணிபுரிவர்.

சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள மாக்ஸிஸ் குழுமத்துக்கு 21 நாடுகளில் உற்பத்தி ஆலைகள் உள்ளன. 5 இடங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும் இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத் தயாரிப்புகளுக்கு 180 நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x