Published : 12 Feb 2019 10:56 AM
Last Updated : 12 Feb 2019 10:56 AM
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் (Junior Telecom Officer-JTO) பதவியில் 198 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.
இந்தக் காலியிடங்கள் அனைத்தும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினருக்கான பின்னடைவு பணியிடங்கள் ஆகும். எனவே, இந்த வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
தகுதி
சிவில், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ., பி.டெக். பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 30. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் கூடுதலாக 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ள கேட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர்.
பணிநியமனத்துக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் எவ்வித போட்டித் தேர்வையும் நடத்தாது. எனவே, பிப்ரவரி கேட் நுழைவுத் தேர்வு விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். உரிய தகுதியும் வயது வரம்பும் உடைய பொறியியல் பட்டதாரிகள் கேட் நுழைவுத் தேர்வு பதிவெண்ணை பயன்படுத்தி பி.எஸ்.என்.எல். இணையதளத்தின் (www.bsnl.co.in) மூலம் மார்ச் மாதம் 12-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.வேலை வேண்டுமா?
தேர்வு விவரம் 2019-ல் கேட் நுழைவுத் தேர்வை சென்னை ஐ.ஐ.டி. நடத்துகிறது.
இதுதொடர்பான விவரங்களை www.gate.iitm.ac.in இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT