Published : 26 Nov 2018 11:42 AM
Last Updated : 26 Nov 2018 11:42 AM

பேட்டரி சைக்கிள்: யமஹாவுடன் கை கோர்க்கும் ஹீரோ

சைக்கிள் தயாரிப்பில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ளது ஹீரோ. இந்நிறுவனம் புதிதாக பேட்டரி சைக்கிளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில்  உள்ள ஜப்பானைச் சேர்ந்த யமஹா மோட்டார் கார்ப்பரேஷனுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஹீரோ மோட்டார்ஸ் குழும நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது ஹீரோ சைக்கிள் லிமிடெட். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமாக இது திகழ்கிறது. இந்நிறுவனம் பேட்டரி சைக்கிள் தயாரிப்புக்காக யமஹா மோட்டார் கார்ப்பரேஷனின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நிறுவனமான மிட்சுயி அண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.

ஹீரோ நிறுவனம் நாளொன்றுக்கு 19 ஆயிரம் சைக்கிளை விற்பனை செய்கிறது. தற்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு ஊக்குவித்து வருவதால் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது. இ-பைக் தயாரிப்பில் யமஹா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி சைக்கிளைத் தயாரிக்கும். இந்த பேட்டரி சைக்கிள் விற்பனையை மிட்சுயி நிறுவனம் மேற்கொள்கிறது.

இரு நிறுவனங்களும் கூட்டாக இணைந்துள்ளதற்கு சைக்கிள் பள்ளத்தாக்கு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது அனேகமாக லூதியானாவில் அமையும். இந்த ஆலையில் அதிகபட்ச முதலீடு ஹீரோ நிறுவனத்தினுடையது.  இரு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து இ-எம்டிபி என்ற பெயரில் பேட்டரி சைக்களை தயாரிக்க உள்ளன. இந்த சைக்கிளுக்கு ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டு அதிகபட்ச வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆலை அமைப்பது, விற்பனை, வினியோகம், சந்தைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்தையும் மிட்சுயி மேற்கொள்ளும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x