

உலகிலேயே பால் உற்பத்தியில் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்கு மேலாக முதலிடம் வகித்து வருகிறது இந்தியா. இந்தியாவின் மொத்த பால் உற்பத்தியில் 62 சதவீத பாலை சிறுகுறு பால் பண்ணையாளர்களே உற்பத்திச் செய்தாலும், அவர்களால் பெரிய அளவில் லாபம் பெற முடியவில்லை.
சிறுகுறு பால் பண்ணையாளர்கள் ஆவின் முதலான கூட்டுறவு இணையத்தை நம்பி இருப்பதாலும், குறைவான மூலதனம், நல்ல மரபணு மற்றும் உற்பத்தித் திறனுள்ள மாடுகள் இல்லாததாலும், தீவனப்பற்றாக்குறை முதலியவற்றாலும் சிறிய அளவிலேயே லாபம் ஈட்டுகின்றனர். பெரிய அளவிலான பால் பண்ணையாளர்களின் வெற்றிக்கு திறன்மிக்க, அதிக பால் உற்பத்தித் திறன் கொண்ட பசுக்கள் மற்றும் சிறந்த மேலாண்மை முறைகளே முக்கியக் காரணம்.