

கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில் 5 அதிசயங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இறவாத பனை, பிறவாத புளி, புழுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலது காது மேல் நோக்கிய நிலையில் இறப்பது என்பவையே அவை. ஈசனில் முடியில் காமதேனு கன்றின் குளம்படி தழும்பு காணப்படும்.
ஒரு முறை நான்முகன் படைப்புத் தொழிலில் சோர்வுற்று கண்ணயர்ந்து விட்டார். இதை உணர்ந்த திருமால் காமதேனுவை அழைத்து, “நீ சிவபெருமானை நோக்கி தவம் செய்து அவர் அருள்பெற்று படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார்.