

தமிழ்நாட்டுக் குடும்ப அமைப்புகளில் மிக நுணுக்கமானதும் சிக்கல் நிறைந்ததும் குடும்ப உறவுமுறைகள்தான். பிற இடங்களிலும் இந்தப் பிரச்சினை பரவலாகத் தென்பட்டாலும் தமிழ்நாட்டைக் குறித்து, அதன் குடும்ப உறவுமுறைப் பின்னல்களின் சிக்கல் களைக் குறித்து ஆராய்ந்தோம் என்றால் அவை பெரும்பாலும் ஓர் ஆணைத் தங்களுடைய கைவசம் வைத்துக்கொள்ள பல பெண்கள் போராடும் ஒரு போர்க்களமாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.
இரண்டு நாள்களுக்கு முன்னால் திடீரென்று என்னுடைய தோழியிடமிருந்து அழைப்பு. ஐசிசி கிரிக்கெட் போட்டியின் வெற்றியைத் தொடர்ந்து பெங்களூருவில் நடைபெற்ற ஊர்வலத்தின் கூட்டநெரிசலால் ஏற்பட்ட கொடிய மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்த நேரம் அது. “அவசரமாகக் கொஞ்சம் வீட்டுக்கு வா” என்று சொல்லிவிட்டுத் தொலைபேசி அழைப்பைத் துண்டித்தாள்.