

சென்ற வாரம் பொள்ளாச்சி சம்பவத்தைப் பற்றியும் அதன் தீர்ப்பைப் பற்றியும் எழுதியதற்கு ஏராளமான மின்னஞ்சல்கள் வந்திருந்தன. ‘பெண்கள் இயல்பாக ஓர் ஆணைச் சந்திக்க இயலாத சூழ்நிலை இருக்கிறது. அதுதான் இத்தகைய குற்றங்களுக்கான முதல் புள்ளி’ என்று நான் எழுதியதைப் பெண்கள் பலரும் ஆமோதித்து அடிக்கோடிட்டு எழுதி இருந்தார்கள்.
பொதுவாகவே ஆண்கள் அவர் களுக்கான இடத்தைச் சமூகரீதியாக அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், பெண்களுக்கான வெளியைப் பெண்களே எடுத்துக்கொள்ளவோ உருவாக்கவோ இந்தச் சமூகம் விடுவதில்லை. சின்ன சின்ன விஷயங் களில்கூடத் தங்கள் ஆசைப்படி வாழ முடியாத துர்பாக்கியமான நிலைக்குத்தான் பெரும்பாலான பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.