

கதைகளையும் நாவல்களையும் ஒலி வடிவில் கேட்ட அனுபவம் முந்தைய தலைமுறைக்கு உண்டு. ஆனால், 90களுக்குப் பிறகு தொலைக்காட்சி அலைவரிசைகளின் அசுர வளர்ச்சியால் அத்தகைய ஒலி வடிவ அனுபவம் இன்றைய தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.
அத்தகைய அனுபவத்தை மீட்டெடுத்து, இன்றைய இளம் தலைமுறைக்கு அளிக்க புதிய வரவாக வந்திருக்கிறது ‘ரேடியோ ரூம்’ செயலி. ஊடகத் துறையில் பல ஆண்டுகளாகத் தலைமைப் பொறுப்புகளை அலங்கரித்த ஏ.எல். வெங்கடாசலத்தின் முயற்சியில் இந்தச் செயலி உருவாகியுள்ளது.