வாய்மொழியின் தோளேறி வரும் சொலவடைகள்! | பாற்கடல் 13

வாய்மொழியின் தோளேறி வரும் சொலவடைகள்! | பாற்கடல் 13
Updated on
3 min read

‘எதுக்குத்தான் லீவுன்னு விடுதாங்களோ, ஏழு நாளும் பள்ளிக்கூடம் வச்சா என்ன’ என்று காலையிலிருந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டு எரிச்சலும் கோபமுமாக வந்தது. அவர்களைக் கடிந்துகொள்கை யில் மனைவி சொன்னார், ‘பிள்ளைகள் அடிச்சிக்கிடும் கூடிக்கிடும்.’

அப்படிச் சொல்லிவிட்டுப் போகிற போக்கில், கூடவே சொலவடை ஒன்றையும் உதிர்த்துவிட்டுப் போனார், ‘ஒரு தொழுவத்து மாடு முட்டிக்கிடவும் செய்யும், நக்கிக்கிடவும் செய்யும்.’ அவர் சொன்னது போலவே கொஞ்ச நேரத்திலேயே குழந்தைகள் மறுபடி சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in