கடல்வழியில் பறக்கும் வாகனம் தயாரிக்கும் சென்னை ஸ்டார்ட்அப்

கடல்வழியில் பறக்கும் வாகனம் தயாரிக்கும் சென்னை ஸ்டார்ட்அப்

Published on

தொழில்நுட்ப வளர்ச்சியால் தரை, நீர், ஆகாய போக்குவரத்தில் வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை ஐஐடி ஆதரவுபெற்ற வாட்டர்பிளை டெக்னாலஜிஸ் என்ற ஸ்டாட்ர்ட்-அப் நிறுவனம், கடல்வழி போக்குவரத்தில் புதியதொரு பரிமாணத்தை ஏற்படுத்தும் வகையில் மின்சார சீகிளைடர் எனப்படும் கடல்வழி பயணிக்கும் வாகனத்தை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கான முன்மாதிரியை பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்தியா கண்காட்சியில் அந்த நிறுவனம் காட்சிப்படுத்தியது.

விங்-இன்-கிரவுண்ட் (டபிள்யூஐஜி) என்று அழைக்கப்படும் இந்த சீகிளைடர்கள் ஒரு தனித்துவமான வடிவமைப்பை கொண்டது. இது கடலோர பகுதியில் கடல் மீது பறக்கும். கடல் மட்டத்திலிருந்து மேல் எழும்பி சுமார் 4 மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in