திருவானைக்கா கோயிலில் தாடங்க பிரதிஷ்டா மஹோத்ஸவம்

திருவானைக்கா கோயிலில் தாடங்க பிரதிஷ்டா மஹோத்ஸவம்

Published on

சல்லா விஸ்வநாத சாஸ்திரி ஆதிசங்கர பகவத்பாதர், 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பூவுலகில் அவதரித்து, பாரத தேசம் முழுவதும் விஜய யாத்திரை மேற்கொண்டு, சைவம், சாக்தம், வைணவம், காணபத்யம், சௌரம், கௌமாரம் ஆகிய 6 வகை பக்தி மார்க்கங்களை வேத நெறியின் அடிப்படையில் நிறுவி, அத்வைத சித்தாந்தத்தை நிலைபெறச் செய்து, காஞ்சி தலத்தில் ஸர்வக்ஞபீடமேறி, ஸ்ரீகாமகோடி பீடத்தை நிறுவினார். அதில் ஆச்சார்யராக வீற்றிருந்து, ஜகத்குருவாய் விளங்கி, உலக நன்மை கருதி பல தலங்களில் மகா யந்திர பிரதிஷ்டைகளை செய்தருளினார்.

அவ்விதம் ஆதிசங்கரர், ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ள தலங்களில் திருஆனைக்கா எனும் கஜாரண்ய க்ஷேத்ரமும் முக்கியமான ஒன்றாகும். திருச்சிராப்பள்ளிக்கு அருகில், திருவானைக்காவில் உபயகாவேரி மத்தியில் வேதமே வெண்ணாவல் மரமாக நின்று, தவம் செய்வதாக ஸ்தல புராணம் கூறுகிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in