விஜயகாந்திடமிருந்து விஜய்க்கு வந்த கதை! | ப்ரியமுடன் விஜய் - 11

விஜயகாந்திடமிருந்து விஜய்க்கு வந்த கதை! | ப்ரியமுடன் விஜய் - 11
Updated on
3 min read

ஈரம் வற்றாத கீழ தஞ்சையின் கோயில் நகரமான குடந்தைக்கு அருகருகில் அமைந்துள்ள இரண்டு ஊர்கள் நல்லமாங்குடி - கயத்தூர். தமிழ் சினிமாவுக்குப் புத்தொளி பாய்ச்சிய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்து, வளர்ந்தது நல்லமாங்குடி என்றால், காதலை திரை வெளியில் கௌரவம் செய்த இயக்குநர் எஸ்.எழில் பிறந்து, வளர்ந்தது கயத்தூர். எழில் எழுதி, இயக்கி 1999இல் வெளியான ‘துள்ளாத மனமும் துள்ளும்’ விஜய்க்கொரு ஜாக்பாட் திரைப்படம். அதுவரை பல காதல் கதைகளில் நடித்திருந்தாலும், விஜயை ஒரு காவியக் கதாநாயகன் ஆக்கியது, கதையும் இசையும் பின்னிப் பிணைந்திருந்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’.

சினிமாவில் பாடகன் ஆகும் ஆசையுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தவன் குட்டி. அவன் வீட்டருகே புதிதாகக் குடியேறுகிறாள் கல்லூரி மாணவியான ருக்மணி. குட்டியைப் பார்த்திராத அவள், அவன் குரலுக்கும் பாடல்களுக்கும் மனதில் இடம் கொடுக்கிறாள். ஆனால், அவன்தான் குட்டி என்பது தெரியாமலேயே அவனை ஒரு கெட்டவன் என நினைத்துக் கொள்கிறாள். சூழ்நிலைகளும் அதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. ஒரு கட்டத்தில் ருக்மணி பார்வை இழக்கக் குட்டியே காரணமாகிவிடுகிறான். ருக்மணியை உயிருக்கு உயிராக மனதில் வரித்துக்கொண்ட அவன், அதன்பின்னர் அவளுக்காக என்ன செய்கிறான், குட்டியை ருக்மணி எப்போது அடையாளம் கண்டாள் என்பதுதான் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தின் கதை. கடந்த 25 ஆண்டுகளாக வயது வேறுபாடின்றி அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வரும் அந்தப் படம் உருவான நாள்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் எஸ்.எழில்:

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in