Published : 09 Apr 2018 11:16 AM
Last Updated : 09 Apr 2018 11:16 AM

சென்னையில் ஆலை அமைக்கும் ஸ்வீடன் நிறுவனம்

வா

கனங்களுக்கான பிரேக்குகளை தயாரிக்கும் ஸ்வீடனை சேர்ந்த பிரெம்போ நிறுவனம் தனது இரண்டாவது ஆலையை சென்னையில் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

2008-ம் ஆண்டு போஷ் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமான கேபிஎக்ஸ் நிறுவனத்தை இந்நிறுவனம் கையகப்படுத்தியது. மகாராஷ்டிர மாநிலம் சக்கன் பகுதியில் இந்நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

10-ம் ஆண்டு விழாவில் மேலும் ஒரு ஆலையை இந்தியாவில் அமைக்கத் திட்டமிட்டு, அதை சென்னையில் நிறுவப் போவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரூ. 72 கோடி முதலீட்டில் ஓராண்டில் இந்த ஆலை கட்டுமானம் முடிந்து உற்பத்தியைத் தொடங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய ஆலையில் மோட்டார் சைக்கிள்களுக்கான டிஸ்க் பிரேக் தயாரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் வகை பிரேக்குகள் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பைபிரே என்ற பிராண்டு பெயரில் பிரேக்குகளை இந்நிறுவனம் தயாரிக்கிறது. இரு சக்கர வாகனங்களுக்கான பிரேக் சந்தையில் 50 சதவீத இடத்தை இந்நிறுவனம் பிடித்துள்ளது.

125 சிசி திறனுக்குக் குறைந்த இரு சக்கர வாகனங்களில் ஒருங்கிணைந்த பிரேக் சிஸ்டம் (சிபிஎஸ்) கட்டாயம் என அரசு புதிய பாதுகாப்பு விதிகளை அறிவிக்க உள்ளது. அதேபோல 125 சிசி திறனுக்கு மேற்பட்ட வாகனங்களில் ஏபிஎஸ் (Anti-braking System) எனப்படும் பிரேக்குகள் கட்டாயமாகிறது. இத்தகைய பிரேக்குகளைத் தயாரிக்கும் பிரெம்போ தயாரிப்புகளுக்கு மிகுந்த தேவை இருக்கும் என்றே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x