Published : 26 Feb 2018 10:25 AM
Last Updated : 26 Feb 2018 10:25 AM
சு
ற்றுச் சூழலுக்கு ஏற்றவை என்பது மட்டுமின்றி பேட்டரி வாகன உபயோகத்தால் கச்சா எண்ணெய் உபயோகம் குறையும், இதனால் அந்நியச் செலாவணி கணிசமாக மிச்சமாகும் என்பதும் முக்கியக் காரணமாகும். இதனாலேயே அரசும் அனைத்து வாகனங்களும் பேட்டரியில் இயங்குவதற்கான இலக்கை 2030 ஆக அரசு நிர்ணயித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்து முடிந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியிலும் அதிக எண்ணிக்கையில் பேட்டரி வாகனங்கள் இடம்பெற்றிருந்தன.
பேட்டரி வாகனங்கள் உற்பத்தியில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் பேட்டரி வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்தே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் புதிய பிரச்சினை உருவாகியுள்ளது. அதாவது சைபர் செக்யூரிட்டி - பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பேட்டரி வாகனம்தான் மாற்று என்று அரசுக்கு அறிவுறுத்திய நிதி ஆயோக் அமைப்புதான் சைபர் செக்யூரிட்டி குறித்த அச்சத்தையும் வெளியிட்டுள்ளது. பேட்டரி வாகனங்களுக்குத் தேவையான அனைத்து கருவிகளும் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலும் இவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன.
சீன நிறுவனங்கள் தயாரிக்கும் பேட்டரி வாகனங்களுக்கான சிப்களை மின்சார மாற்றிகளாக பயன்படுத்துகின்றன.இத்தகைய உதிரி பாகங்களைத்தான் இந்திய நிறுவனங்களும் தங்களது வாகனங்களுக்கு இறக்குமதி செய்தாக வேண்டும். இங்கு தயாராகும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பொருள்களில் 80 சதவீதம் இறக்குமதி செய்யப்படுபவையாகும். சிப்-கள் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. சாரஸ்வத் தெரிவித்துள்ளார். இவர் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) இயக்குநராக பணியாற்றியவர். பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.
பேட்டரி வாகனங்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகா மல் இருக்க வேண்டுமெனில் அவற்றில் பயன்படுத்தப்படும் மின் னணு சாதனங்களில் 55 சதவீதம் வரை உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பேட்டரி வாகனங்களுக் கான உதிரி பாகங்கள் உள்நாட்டில் தயாரானால் அதன் விலை குறையும், அதோடு தகவல் திருட்டுகளையும் குறைக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT