Published : 22 Jan 2018 11:22 AM
Last Updated : 22 Jan 2018 11:22 AM
சு
ற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக வாகனப் புகை வெளியேற்றத்தைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் விதமாக பேட்டரி வாகனங்களுக்கு சாலை வரியிலிருந்து முற்றிலுமாக விலக்கு அளித்துள்ளது கோவா அரசு.
வாகனங்களால் வெளியேறும் புகை மாசைக் குறைக்கும் வகையிலும், பேட்டரி வாகன உபயோகத்தை ஊக்குவிக்கும் வகையிலும் சாலை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கோவா யூனியன் பிரதேச போக்குவரத்துத் துறை இயக்குநர் நிகில் தேசாய் குறிப்பிட்டுள்ளார்.
பேட்டரி வாகன உபயோகத்தை ஊக்குவிக்க வேண்டுமெனில் ஜிஎஸ்டியை 5% ஆக நிர்ணயிக்க வேண்டும் என்றும், தனி நபர்கள் முழுத் தொகை செலுத்தி பேட்டரி வாகனங்களை வாங்கினால் அவர்களுக்கு ஒரு முறை மட்டும் வருமான வரி விலக்கில் வாகன விலையில் 30% வரை வரி விலக்கு அளிக்கலாம் என்றும் மத்திய அரசுக்கு இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.
பேட்டரி வாகன உபயோகத்தை அதிகரிக்கும் விதமாக பல்வேறு சலுகைகளை மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. அந்த வகையில் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் விதமாக சாலை வரியை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது கோவா. இது குறித்த அரசாணையையும் வெளியிட்டுள்ளது. பிற மாநில அரசுகளும் கோவாவை பின்பற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT