Published : 06 Nov 2017 11:22 AM
Last Updated : 06 Nov 2017 11:22 AM

விரைவில் வருகிறது டிவிஎஸ் பேட்டரி ஸ்கூட்டர்

டி

விஎஸ் மோட்டார் நிறுவனம் பேட்டரி வாகனத் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிறுவனத்தின் பிரபல பிராண்டான ஜூபிடர் ஸ்கூட்டரெட்டை பேட்டரியில் இயங்கும் வகையில் தயாரிப்பதற்கான நடவடிக்கையில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது.

லித்தியம் அயன் பேட்டரியை கொண்டு செயல்படும் வகையில் இது உருவாக்கப்படுகிறது. இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ.தூரம் ஓடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

அநேகமாக ஜூன் 2018-ம் ஆண்டில் இது சந்தைக்கு வரும் என தெரிகிறது.

டிவிஎஸ் தயாரிப்புகளில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரெட்களில் ஜூபிடர் பிராண்ட் முன்னிலை வகிக்கிறது. இந்த பிராண்டு பெயரிலேயே பேட்டரி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2030-ம் ஆண்டில் அனைத்து ஆட்டோமொபைல் வாகனங்களும் பேட்டரியில் இயங்கக் கூடியதாக உற்பத்தி செய்வதே இலக்கு என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இலக்கை எட்டும் வகையில் பெரும்பாலான ஆட்டோமொபைல் துறையினர் பேட்டரி வாகன தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஏற்கெனவே பேட்டரி வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அதெர் நிறுவனத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளது.

இது தவிர ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், ஆம்பியர் வாகனங்கள் பேட்டரியால் இயங்குபவை. இவையும் கடந்த 4 ஆண்டுகளாக விற்பனையாகி வருகின்றன.

அமெரிக்காவைச் சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவன மான ஜென்ஸே நிறுவனத்தை மஹி ந்திரா அண்ட் மஹிந்திரா கையகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் பேட்டரி ஸ்கூட்டர்கள் 2019-ல் வெளியாகும் எனத் தெரிகிறது. யமஹா, பஜாஜ், எலெக்ட்ரோதெர்ம் ஆகிய நிறுவனங்களும் பேட்டரி வாகனங்களை அடுத்த ஆண்டு தயாரித்து விற்க திட்டமிட்டுள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் 4.5 லட்சம் பேட்டரி வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. அடுத்த நான்கு ஆண்டுகளில் 5 லட்சம் வாகனங்கள் விற்பனையாகும் அளவுக்கு சந்தை விரிவடையும் என இத்துறை வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

வளர்ந்து வரும் அதேசமயம் சூழல் பாதுகாப்பான டிவிஎஸ் ஜூபிடர் பேட்டரி வாகனத்துக்கும் அமோக வரவேற்பு இருக்கும் என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x