Published : 12 Nov 2017 01:15 PM
Last Updated : 12 Nov 2017 01:15 PM

கேளாய் பெண்ணே: மழைக்காலத்தில் ஏன் உடல் வலிக்கிறது?

மழைக்காலம் தொடங்கியவுடன் எனக்குக் கை, கால் மூட்டுகள் அதிகமாக வலிக்கின்றன. ஏன் இப்படி வலிக்கிறது? இது குணமாக என்ன செய்ய வேண்டும்?

- மல்லிகா, சென்னை.

கே.கலைவாணன், எலும்பு சிகிச்சை மருத்துவர், சென்னை.

எது முடக்குவாதம்?

காலையில் எழுந்தவுடன் கை விரல்களை மடக்க முடியாமல் சிறிது நேரத்துக்கு வலிக்கும். பின்னர், வேலை செய்யச் செய்ய விரல்கள் எப்போதும் போலாகிவிடும். இதேபோல் எப்போதும் கை விரல்களைக் கொஞ்ச நேரத்துக்கு மடக்க முடியாமல் வலி இருந்தால் முடக்குவாதமாக இருக்கக்கூடும். இதுபோன்ற பிரச்சினை தொடர்ச்சியாக இருந்தால் எலும்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது நல்லது. அதேபோல் இரவு படுக்கச் செல்லும்போது உடலில் அதிக வலி இருக்கும். ஆனால், ஓய்வெடுத்த பின்பு காலை எழுந்திருக்கும்போது சரியாகிவிடும். இதேபோல் எப்போதும் உடல்வலி இருப்பவர்களுக்கு எலும்புத் தேய்மான பிரச்சினை பாதிப்பும் இருக்கலாம்.

நீரிழிவு, தைராய்டு உள்ளவர்களின் கவனத்துக்கு

மழைக்காலத்தில் நீரிழிவு, தைராய்டு, ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்களுக்கு உடலின் இணைப்புப் பகுதிகளில் வலிக்கும். இதற்குக் காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் தோள்பட்டை, கை, கால் தசைகளை விரிவடையச் செய்யும் உடற்பயிற்சிகளைச் செய்து பின்னர் அன்றாட வேலைகளைத் தொடங்கலாம். அதேபோல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கை, கால்களில் உள்ள எலும்புகளில் வலி இருக்கும். சாதாரண வலிகளுக்குத் தைலம் தேய்த்து, வெந்நீர் ஒத்தடம் கொடுத்தாலே சரியாகிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x