Published : 27 Nov 2017 11:04 AM
Last Updated : 27 Nov 2017 11:04 AM

ஹைபிரிட் கார் தயாரிக்கும்ஹோண்டா!

ட்டோமொபைல் துறையில் பிற நிறுவனங்களிடையிலான போட்டியில் தாமும் எங்கே பின் தங்கிவிடுமோ என்கிற அச்சத்தில் ஹோண்டா நிறுவனமும் பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

ஆண்டுக்கு 2 புதிய மாடல் கார் என்ற வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 6 மாடல் கார்களை அறிமுகம் செய்யப் போவதாக சமீபத்தில் சென்னை வந்திருந்த ஹோண்டா நிறுவனத்தின் துணைத் தலைவர் ஜானேஸ்வர் சென் தெரிவித்தார்.

பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பேட்டரி வாகன தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையில், ஹோண்டா நிறுவனம் இந்தபோட்டியில் பின் தங்கி விட்டதா என்று கேட்டதற்கு, ஹைபிரிட் வாகனங்களை அதாவது டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கும் வகையிலான வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்திய சந்தையில் விலை மிக முக்கிய காரணியாக திகழ்கிறது. அந்த வரிசையில் பேட்டரி கார்கள் மீதான ஜிஎஸ்டி அதிகமாக உள்ளதால் ஹைபிரிட் வாகனங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக உத்திசார் அடிப்படையில் பரிசீலித்து வருவதாக சென் குறிப்பிட்டார்.

பேட்டரி வாகனங்களுக்கு அரசு அதிக சலுகை அளிக்கும்பட்சத்தில்தான் பேட்டரி வாகனத் தயாரிப்பு அதிகரிக்கும். ஆட்டோமொபைல் துறையினர் அதிக அளவில் இதற்கான ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபடுவர் என்று அவர் மேலும் கூறினார்.

அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் புதிதாக அறிமுகம் செய்யவிருக்கும் மாடல் கார் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x