Last Updated : 07 Oct, 2017 10:42 AM

 

Published : 07 Oct 2017 10:42 AM
Last Updated : 07 Oct 2017 10:42 AM

சின்னத்திரையோரம் : ‘சைக்கோ’வாக நடிக்க ஆசை

சின்னத்திரை நடிகை சோனியா வரும் தீபாவளி பண்டிகையை அந்தமானில் வசிக்கும் அப்பா, அம்மாவோடு கொண்டாடத் திட்டமிட்டு புறப்பட்டிருக்கிறார்.

‘‘வீட்டில் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் சீரியல் ஷூட்டிங் நடக்கும் இடத்துக்கு போய்விட்டால் எல்லாமும் எனக்கு மறந்துபோகும். நடிப்பு என்றால் அவ்வளவு இஷ்டம். அழகி, முந்தானை முடிச்சு, மருதாணி, பார்த்தன் ஞாபகம் இல்லையோ, தாமரை என்று 12 சீரியல்களில் வட்டமடித்துவிட்டேன். இதில் ஒரே நாளில் 5 சீரியல்களில் நடிக்கும் சூழலும் அமைந்திருக்கிறது.

ஒரு ஷூட்டிங்கில் இருந்து இன்னொரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு காரில் போகும்போதுதான் சாப்பிடவே முடியும். இவ்வளவு சீரியல்கள் ஏற்றாலும் கதையும், சூழலும் பிடித்தால் மட்டும்தான் ஏற்பேன். இப்போதும் அப்படித்தான் புதிய சீரியலுக்கான கதைகள் கேட்டு வருகிறேன். ஹிந்தியில் ஒளிபரப்பான ‘பெஹெத்’ சீரியலின் மாயா கதாபாத்திரம் நடிப்பு சமீபத்தில் என்னை வெகுவாக ஈர்த்தது. அந்த மாதிரி ஒரு சைகோ கதாபாத்திரம் ஏற்க வேண்டும் என்பதில் ஆவலாக இருக்கிறேன். பார்க்கலாம்’’ என்கிறார், சோனியா.

 

வெகுளி பையன்... மாடர்ன் காதலி

விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘சின்னத்தம்பி’ புதிய தொடரில் ப்ரஜன், பவானி ரெட்டி நடிக்கிறார்கள்.

வீரமும், பாசமும் நிறைந்த அம்மா - பிள்ளை. பெண்களை கண்டால் தூர ஓடுற கிராமத்து வெகுளி பையன் சின்னத்தம்பியை அந்தப் பகுதி பெண்கள் பலரும் தங்களுக்கு கணவனாக வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். மற்றொரு பக்கம், பணக்கார திமிர் பிடித்த மாடர்ன் சிட்டி பெண் நந்தினி. ஆனால் நல்ல மனம் படைத்தவள். இப்படி முற்றிலும் மாறுபட்ட குணாதிசயங்கள் கொண்ட இவர்கள் சந்தித்தால் எப்படி இருக்கும். இவர்கள் காதலர்கள் ஆவார்களா? இந்த இரு துருவங்கள் கல்யாண வாழ்க்கையில் இணைந்தால் என்ன ஆகும்?

இந்த இரு வேறுபட்ட கதாபாத்திரங்களின் கல்யாணம், காதல், வாழ்க்கை. அவர்கள் சார்ந்த இரு குடும்பங்களின் கலாச்சார மோதல்கள், பொருளாதார வேறுபாடுகள் அனைத்தும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் வர விருக்கிறது, சின்னத்தம்பி. இதில் சின்னத்தம்பியாக ‘காதலிக்கநேரமில்லை’ தொடரில் நடித்த ப்ரஜன் நடிக்கிறார். நந்தினியாக ‘ரெட்டைவால் குருவி’ தொடரில் நடித்த பாவனிரெட்டி நடிக்கிறார். அருள்ராசன் இயக்கும் இந்த தொடருக்கு இளையவன் இசையமைக்கிறார்.

 

‘சண்டக்கோழி 2’ ல் நடிக்கும் பாவாஸ்

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன்2’ நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்ற பாவாஸ் ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார்.

கடந்த 18 வாரங்களுக்கும் மேலாக ஒளிபரப்பான ‘ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன்2’ நிகழ்ச்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் பெற்றுள்ள 9 வயதான பாவாஸ் மகிழ்ச்சி பொங்க இது குறித்து கூறியதாவது :-

தமிழகம் முழுக்க என்னோடு மொத்தம் 22 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் எல்லோரும் இப்போது என் நெருக்கமான நண்பர்கள். இறுதிப்போட்டிக்கு வருவேன், கோப்பை பெறுவேன் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இறுதி போட்டி வரைக்கும் வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. என்னோட அம்மா, என் பள்ளி, எங்க ரமேஷ் கண்ணன் மாஸ்டர் கொடுத்த ஒத்துழைப்பும் இந்த பட்டத்துக்கு முக்கிய காரணம். இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த கார்முகில் வண்ணன், நித்யா, நிகாரிகா ஆகியோரது பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.

இறுதிப்போட்டியில் சாதாணமாக எந்த பதட்டமும் இல்லாமல் நடித்தேன். நான் வடிவேலு மட்டும்தான் பண்ணுவேன் என்று நினைத்தனர். ஆனால், எல்லா கதாபாத்திரத்துக்கும் பொருந்துவேன் என்று எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி. இந்த அன்பால் இப்போது ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. இதோ அந்தப் படப்பிடிப்புக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன்’’ என்கிறார், பாவாஸ்.

 

பல பரிமாணங்கள்... வித்தியாசமான களம்

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் காலை 7.30 மணிக்கு வரும் பெப்பர்ஸ் மார்னிங் நிகழ்ச்சி ‘சிறிய மாற்றம் பெரிய வெற்றி’ , ‘நேரம் நல்ல நேரம்’ , ‘யோகம் தரும் யோகா’ , ‘சிறகடிக்கும் மனசு’, ‘இன்று ஒரு கதை’ ஆகிய பல பரிமாணங்களில் வித்தியாசமான களத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

‘‘ஒரே நிகழ்ச்சிக்குள் இப்படி பல பிரிவுகளில் அதுவும் மக்கள் ரசிக்கும் விதமாக கொடுப்பது அரிது. அதே நேரத்தில் பார்வையாளர்களுக்கு பயனுள்ள விஷயமாகவும் அது அமைய வேண்டும். இப்படி ஒரு நிகழ்ச்சிக்குள் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. சிறிய மாற்றம் பெரிய வெற்றி என்ற நிகழ்ச்சியில் பல சாதனையாளர்களின் வாழ்க்கையில் நடந்த சின்ன சின்ன சம்பவங்கள் பெரிய வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்ததை ​விளக்கும் ​ நிகழ்ச்சி இடம்பெறுகிறது.

 தினமும் ஜோதிடம் கணிப்புகளும் ,ராசி பலன் நிகழ்ச்சிகளும் நேரம் நல்ல நேரம் நிகழ்ச்சியிலும், ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையில் யோகப்பயிற்சியும்,ஆயுர்வேத மருத்துவமும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பற்றிய விழிப்புணர்வை வழங்கும் யோகம் தரும் யோகா மற்றும் இன்று ஒரு கதை போன்ற நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது தவிர சிறகடிக்கும் மனசு நிகழ்ச்சி, காதல் பிரச்சனை ,கணவன் ,மனைவி இடையே பிரிவுகள் குடும்ப உறவுகளில் சிக்கல் ,மாணவர்களின் கல்வி பற்றிய அச்சம் மற்றும் பாதுகாப்பு குறிப்புகள் சொல்லும் நிகழ்ச்சியாக இருக்கும்!’’ என்கிறார், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஸ்ரீதேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x