Published : 09 Jul 2014 02:36 PM
Last Updated : 09 Jul 2014 02:36 PM

தெரியுமா? - விந்தைப் பூக்கள்

# பிளாக் டியுலிங் என்றழைக்கப்படும் கறுப்பு ரோஜாவின் நிறம் கறுப்பு. இது அல்லி வகையைச் சேர்ந்தது.

# பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்வது குறிஞ்சி மலர் என்பது உங்களுக்கு தெரியும் அல்லவா? ஆனால், 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய மலர் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் காக்டஸ். இது இந்தியப் பெருங்கடலில் ரீயூனியன் தீவில் காணப்படுகின்றன.

# ‘பீ ஆர்கிட்’ என்றழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் தேனீக்களைப் போல் தோற்றமளிக்கும்.

# சோவியத் ரஷ்யாவில் காபர்வோஸ்க் என்ற இடத்திலுள்ள குகைகளில் வித்தியாசமான தாமரை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. காற்றடிக்கும்போது இந்த மலர்கள் வண்ணம் மாறுகின்றன. முதலில் நீல வண்ணமாகி, சிவப்பாக மாறிவிடுகின்றன. மாலையில் இவை கறுப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கும்.

# அசெளரா ரூப்ரா என்ற நாய்க்குடை பூ ஆம்பல் மலர் போலவே சிரிக்கும். அதுமட்டுமல்ல, ஆம்பலைப் போலவே தோற்றமளிக்கும்.

# ஜோபி வீட் என்ற ஒரு சிவப்பிந்திய மந்திரவாதியின் பெயரைத் தாங்கியுள்ள இச்செடி பார்ப்பதற்கு அச்சமூட்டுவதாக காணப்படும்.

# நைகிரிட்டல்லா ரூப்ரா என்ற பெயருடைய செடி ஐரோப்பாவில் உள்ளது. இதன் பூக்கள் சாக்லேட்டின் மணத்தையும் நிறத்தையும் கொண்டவை.

# வாகை ஒரு விந்தையான மலர். மாலையில் மலரும் இந்தப் பூ நள்ளிரவில் பிஞ்சாகி சில விநாடிகளில் வளர்ந்து காலையிலேயே அது காயாகிவிடும்.

# ஜாவா மலைப்பகுதியில் காணப்படும் ராயல் கெளஸ்லிப் என்ற பூச்செடி தோன்றினால் அது எரிமலை வெடிப்பதைக் குறிக்கும் அறிகுறியாம்.

- நன்றி: அதிசய மலர்கள் 1000,
ஆசிரியர் : கடல் நாகராசன், பாரதி பதிப்பகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x