இரட்டை சதம் விளாசி அபிக்யான் குண்டு சாதனை!

இரட்டை சதம் விளாசி அபிக்யான் குண்டு சாதனை!
Updated on
1 min read

துபாய்: யு-19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது.

விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேனான அபிக்யான் குண்டு இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார். அதிரடியாக விளையாடிய அபிக்யான் குண்டு 125 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 209 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன் மூலம் இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அபிக்யான் படைத்தார். தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் வேதாந்த் திரிவேதி 106 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 90 ரன்களும் சேர்த்தனர். 409 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மலேசியா அணி 32.1 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் மித வேகப்பந்து வீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 315 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி தனது பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.

2-வது வீரர்: யு-19 ஆசிய கோப்பை தொடரில் மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அபிக்யான் குண்டு 209 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உலக அரங்கில் யு-19 மட்டத்தில் இரட்டை சதம் விளாசிய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் அபிக்யான். இதற்கு முன்னர் ஜிம்பாப் வேக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் ஜோரிச் வான் ஷால்க்விக் 215 ரன்கள் விளாசியிருந்தார்.

இரட்டை சதம் விளாசி அபிக்யான் குண்டு சாதனை!
சிஎஸ்கே உள்ளிட்ட 10 அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் முழு விவரம்: ஐபிஎல் மினி ஏலம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in