தரக்குறைவாக விமர்சித்த அணியின் இயக்குநருக்கு எதிராக வங்கதேச வீரர்கள் போர்க்கொடி

டி 20 உலகக் கோப்பை புறக்கணிப்பு விவகாரம்
தரக்குறைவாக விமர்சித்த அணியின் இயக்குநருக்கு எதிராக வங்கதேச வீரர்கள் போர்க்கொடி
Updated on
2 min read

டாக்கா: வங்கதேச கிரிக்​கெட் அணி​யின் வேகப்​பந்து வீச்சார் முஸ்​டாபிஸுர் ரஹ்​மானை கடந்த மாதம் நடை​பெற்ற ஐபிஎல் ஏலத்​தின் போது கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்​திருந்​தது. இந்​நிலை​யில் வங்கதேசத்​தில் இந்துக்​கள் மீது தொடர்ச்​சி​யாக தாக்​குதல் நடத்​தப்​பட்டு வரும் நிலை​யில் கொல்​கத்தா நைட்​ரைடர்ஸ் அணி​யில் இருந்து முஸ்​டாபிஸுர் ரஹ்​மானை விடுவிக்​கு​மாறு பிசிசிஐ தெரி​வித்​திருந்​தது.

இந்த நடவடிக்​கைக்கு வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் எதிர்ப்பு தெரி​வித்​தது. தொடர்ந்து இந்​தி​யா​வில் அடுத்த மாதம் நடை​பெற உள்ள ஐசிசி டி 20 உலகக் கோப்​பை​யில் பாது​காப்பு காரணங்​களை கருதி பங்​கேற்க முடி​யாது என தெரி​வித்​தது. மேலும் இந்​தி​யா​வில் வங்​கதேசம் பங்கேற்கும் 4 ஆட்​டங்​களை​யும் இலங்​கைக்கு மாற்ற வேண்​டும் என வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் ஐசிசிக்கு கடிதம் எழு​தி​யது. ஆனால் இதை ஐசிசி ஏற்க மறுத்​தது. இதனால் டி 20 உலகக் கோப்​பையை புறக்​கணிக்​கும் முடிவை நோக்கி வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் செல்ல ஆயத்​த​மாகி வரு​கிறது.

இந்த கருத்தை தொடர்ச்​சி​யாக வலி​யுறுத்தி வரும் வங்கதேச கிரிக்​கெட் வாரி​யத்​தின் இயக்​குந​ரான நஜ்​முல் இஸ்​லாம், டி 20 உலகக் கோப்​பையை வங்​கதேசம் புறக்கணிக்​கும் பட்​சத்​தில் கிரிக்​கெட் வீரர்​களுக்கு எந்தவித இழப்​பீட்டு தொகை​யை​யும் வழங்​க​மாட்​டோம். இவர்​கள் என்ன செய்​து​விட்​டார்​கள், எந்த ஐசிசி தொடரையும் வெல்​ல​வில்​லை. இவர்​களுக்​காக எதற்​காக கோடிக்​கணக்​கில் பணம் கொடுக்க வேண்​டும் என கருத்து தெரி​வித்​திருந்​தார்.

இதற்கு வீரர்​கள் மத்​தி​யில் கடும் எதிர்ப்பு எழுந்​துள்​ளது. இதையடுத்து வங்​கதேசத்​தில் நடை​பெற்று வரும் வங்கதேச பிரிமீயர் லீக் டி 20 தொடரின் இரு ஆட்​டங்​களை கடந்த வியாழக்​கிழமை தேசிய அணிக்​காக விளை​யாடி வரும் சீனியர் வீரர்​கள் புறக்​கணித்​தனர். நிலைமை கட்டுப்​பாட்டை மீறியதை தொடர்ந்து நஜ்​முல் இஸ்​லாம், வாரி​யத்​தின் நிதிக்​குழு​வில் இருந்து நீக்​கப்​பட்​டார். இதைத் தொடர்ந்து வங்​கதேச கிரிக்​கெட் வீரர்​கள் நலவாரியத்​தின் தலை​வர் முகமது மிதுனை அழைத்து வாரி​யம் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது.

அப்​போது வீரர்​கள் தரப்​பில் பல்​வேறு கோரிக்​கைகள் முன்வைக்​கப்​பட்​டன. அவதூறு கருத்து தெரி​வித்த நஜ்​முல் இஸ்லாம் பகிரங்கமாக மன்​னிப்பு கேட்க வேண்​டும் என வலிறுத்​தப்​பட்​டது. பேச்​சு​வார்த்​தைக்கு பின்​னர் பிபிஎல் தொடரில் பங்​கேற்க வங்​கதேச வீரர்​கள் சம்​மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வியாழக்​கிழமை வீரர்கள் புறக்​கணித்த 2 ஆட்​டங்​களும் நேற்று நடத்தப்பட்டன.

இதற்​கிடையே வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் தரப்​பில் அறிக்கை ஒன்று வெளி​யிடப்​பட்​டது. அதில், “நஜ்​முல் இஸ்லாம் கூறியது அவரது தனிப்​பட்ட கருத்​து. இதற்​காக வருந்​துகிறோம். முறைப்​படி எந்​தவொரு வாரிய இயக்​குநரும், வாரிய உறுப்​பினரும் அறிக்கை வெளியிடாவிட்டால் அதற்கு வாரி​யம் பொறுப்​பேற்​காது” எனத் தெரி​வித்​துள்​ளது.

வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யத்​தின் மற்​றொரு இயக்குநரான இப்​தி​கார் ரஹ்​மான் கூறும்​போது, “கடந்த இரண்டு நாட்​களில் சில துர​திர்​ஷ்ட​வச​மான சம்​பவங்​கள் நடந்​துள்​ளன, அதனால்​தான் பிபிஎல் போட்​டிகளை நடத்த முடிய​வில்​லை. இந்​தக் கருத்​துக்​களை தெரி​வித்த இயக்​குநர் நிதிக் குழு​விலிருந்​து நீக்​கப்​பட்​டுள்​ளார்.

நாங்​கள் எங்​கள் அரசி​யலமைப்​பைப் பின்​பற்​றுகிறோம், அதன் படி, அவருக்கு விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளோம். அவர் பதிலளிக்க 48 மணிநேரம் அவகாசம் அளிக்​கப்​பட்​டுள்​ளது, இது சனிக்​கிழமை நண்​பகலில் முடிவடை​யும். பின்​னர் இந்த விவ​காரம் ஒழுங்​கு​முறைக் குழு​வுக்கு செல்​லும். நாங்​கள் நாள் முழு​வதும் அவரைத் தொடர்பு கொள்ள முயற்​சித்​தோம். அவரை இங்கு அழைத்து வர விரும்​பினோம், ஆனால் எங்​களால் அவரைத் தொடர்பு கொள்ள முடிய​வில்​லை” என்​றார்.

‘கொலை மிரட்​டல் வரு​கிறது’

வங்​கதேச கிரிக்​கெட் வீரர்​கள் நலவாரி​யத்​தின் தலை​வர் முகமது மிதுன் கூறும்​போது, “நாட்​டுக்கு எதி​ராக எந்த வார்த்​தையை​யும் நான் பயன்​படுத்​த​வில்​லை. கிரிக்​கெட் மற்​றும் வீரர்​களின் நலனுக்​காக மட்​டுமே பேசினேன். இங்கே எந்த தனிப்​பட்ட பிரச்​சினை​யும் இல்​லை. நான் ஒரு அமைப்​பின் தலை​வ​ராக இருப்​ப​தால், வீரர்​களின் உரிமைகள் பற்​றிப் பேச​வில்லை என்​றால், நான் இந்த பதவி​யில் இருப்​ப​தால் என்ன பயன்? யாரும் நாட்டை விட உயர்ந்​தவர்​கள் அல்ல.

இந்த விவ​காரத்​தில் எனக்கு கொலை மிரட்​டல்​கள் வருகின்றன. பொது​வாக தெரி​யாத எண்​களில் இருந்து போன் அழைப்​பு​கள் வந்​தால் நான் எடுக்​க​மாட்​டேன். ஆனால் குறுந்​தகவல்​கள் மற்​றும் வாட்​ஸ்​அப்​பில் குரல் பதிவு​கள் வாயி​லாக மிரட்​டல்​கள் வரு​கின்​றன. இதை தடுக்க முடிய​வில்​லை. இதுதொடர்​பாக கிரிக்​கெட் வாரி​யத்​திடம் எது​வும் நான் கூற​வில்​லை. என்னை போன்று சில வீரர்​களுக்​கும் மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்​டுள்​ளன.

நாங்​கள் நிச்​சய​மாக வீரர்​களின் பாது​காப்பை விரும்புகிறோம். உயிருக்கு அச்​சுறுத்​தல் உள்ள நிலை​யில் யாரும் சென்று விளை​யாடு​வதை நாங்​கள் ஒரு​போதும் விரும்​புவ​தில்​லை. ஆனால் அதே நேரத்​தில், இது உலகக் கோப்பை தொடர். இதன் காரண​மாக வீரர்​கள் விளை​யாட வேண்​டும் என்று நாங்​கள் விரும்​பு​கிறோம். வீரர்​களின் நலனைக் கருத்​தில்​ கொண்​டு வாரிய​மும்​ அரசும்​ ஒரு நல்ல முடிவை எடுக்​கும்​ என்​று நான்​ நம்​புகிறேன்​” என்​றார்.

தரக்குறைவாக விமர்சித்த அணியின் இயக்குநருக்கு எதிராக வங்கதேச வீரர்கள் போர்க்கொடி
“ஸ்டெயினின் ஆக்ரோஷம் எனக்கு பிடிக்கும்” - இந்திய பவுலர் ஹெனில் படேல் பகிர்வு | U19 World Cup

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in