

ஷுப்மன் கில்
ஜெய்ப்பூர்: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் இன்று பஞ்சாப் அணிக்காக களமிறங்கவுள்ளார்.
33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன. இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ஆகியோர் விளையாடினர்.
இந்நிலையில், இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று முதல் விளையாட உள்ளார். பஞ்சாப் அணிக்காக அவர் விளையாட உள்ளார். இன்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பஞ்சாப் - சிக்கிம் அணிகள் மோத உள்ளன.
டி20 போட்டிகளில் மோசமான ஃபார்ம் காரணமாக 2026 டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இருந்து ஷுப்மன் கில் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.