

குவாஹாட்டி: 79-வது சந்தோஷ் டிராபிக்கான தேசிய கால்பந்துப் போட்டியில் தமிழக அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த கால்பந்து லீக் போட்டி அசாம் மாநிலம் தாகுவாகானா கால்பந்து மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அணியும், நாகாலாந்து கால்பந்து சங்க அணியும் மோதின. இதில் தமிழக அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.
தமிழக அணி சார்பில் ஏ. ரீகன் 43-வது நிமிடத்திலும், சூரஜ்குமார் 65-வ து நிமிடத்திலும், எஸ்.தேவதத் 89-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். சிறப்பாக விளையாடி ஒரு கோலடித்த எஸ்.தேவதத் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.