ரிங்கு சிங் 176 ரன் விளாசல்: 3 புள்ளிகளை பெற்றது உ.பி

ரிங்கு சிங் 176 ரன் விளாசல்: 3 புள்ளிகளை பெற்றது உ.பி
Updated on
1 min read

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - உத்​தரபிரதேசம் அணி​கள் இடையிலான ஆட்​டம் கோவை​யில் நடை​பெற்று வந்​தது. தமிழ்நாடு அணி முதல் இன்​னிங்​ஸில் 455 ரன்​கள் குவித்து ஆட்டமிழந்​தது.

இதையடுத்து பேட் செய்த உத்​தரபிரதேச அணி 3-வது நாள் ஆட்டத்​தின் முடி​வில் 113 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 339 ரன்​கள் எடுத்​தது. ரிங்கு சிங் 98, ஷிவம் சர்மா 18 ரன்​களு​டன் களத்தில் இருந்​தனர்.

நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய உத்​தரபிரதேச அணி 145.1 ஓவர்​களில் 460 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. ரிங்கு சிங் 247 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 17 பவுண்​டரி​களு​டன் 176 ரன்​கள் விளாசி​னார். ஷிவம் சர்மா 22, கார்த்​திக் யாதவ் 20, குனால் தியாகி 5 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர்.

தமிழக அணி சார்பில் வித்​யூத் 4, சாய் கிஷோர் 3, சரவண குமார் 2 விக்கெட்களை வீழ்த்​தினர். 5 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தமிழக அணி 21 ஓவர்​களில் 2 விக்கெட்​கள் இழப்​புக்கு 103 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆட்​டம் முடித்​துக்கொள்​ளப்​பட்​டது.

பாலசுப்​ரமணி​யம் சச்​சின் 59, நாராயண் ஜெகதீசன் 44 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். பிரதோஷ் ரஞ்​ஜன் பால் ரன் ஏதும் எடுக்​காமல் களத்​தில் இருந்​தார். ரிங்கு சிங்​கு​வின் அதிரடி​யால் முதல் இன்னிங்​ஸில் முன்​னிலை பெற்ற உத்​தரபிரதேச அணிக்கு 3 புள்ளி​கள் வழங்​கப்​பட்​டது. தமிழக அணி ஒரு புள்​ளியை பெற்​றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in