3 வடிவிலும் விளையாடுவது வரம்: வாஷிங்டன் சுந்தர் கருத்து

3 வடிவிலும் விளையாடுவது வரம்: வாஷிங்டன் சுந்தர் கருத்து
Updated on
1 min read

புதுடெல்லி: இந்​திய அணிக்​காக அனைத்து வடிவி​லான போட்​டிகளி​லும் விளை​யாடு​வது சவால் அல்ல.. வரம் என இந்​திய அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான வாஷிங்டன் சுந்தர் கூறி​யுள்​ளார்.

தமிழகத்​தைச் சேர்ந்த ஆல்​ர​வுண்​ட​ரான வாஷிங்​டன் சுந்தர் இந்​திய அணிக்​காக டெஸ்ட், ஒரு​நாள் மற்​றும் டி20 போட்​டிகளில் விளை​யாடி வரு​கிறார். கடந்த 2017-ம் ஆண்டு இந்​திய அணி​யில் அறி​முக​மான வாஷிங்​டன் சுந்தர், கடந்த 18 மாதங்​களாக இந்​திய அணி​யில் தொடர்ச்சி​யாக இடம்​பெற்று சிறப்​பான பங்​களிப்பை வழங்கி வரு​கிறார்.

இந்​நிலை​யில் அவர் கூறும்​போது, “இந்​திய அணிக்​காக அனைத்து வடிவி​லான போட்​டிகளி​லும் விளை​யாடும் வீரராக இருப்​பது மிகப் பெரிய வரம். ஏனெனில், இந்​திய அணி எப்​படி விளை​யாடிக் கொண்​டிருக்​கிறது என்​பது நம் அனை​வருக்​கும் தெரி​யும்.

இந்​திய அணிக்​காக மூன்று வடிவி​லான போட்​டிகளி​லும் விளை​யாடும் வாய்ப்பு கிடைத்​திருப்​பது அழகான வரம். என்​னுடைய நாட்​டுக்​காக நிறைய போட்​டிகளை வென்று கொடுக்க ஆவலோடு காத்​திருக்​கிறேன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அங்கம் வகிக்க விரும்புகிறேன்” என்​றார்​.

3 வடிவிலும் விளையாடுவது வரம்: வாஷிங்டன் சுந்தர் கருத்து
தமிழகத்தில் ஜென்ஸீ வாக்குகள் யாருக்கு? - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in