எந்த அணி​யும் 100% முழுமையானது இல்லை: மனம் திறக்கும் குஜ​ராத் அணியின் ரஷித் கான்

எந்த அணி​யும் 100% முழுமையானது இல்லை: மனம் திறக்கும் குஜ​ராத் அணியின் ரஷித் கான்
Updated on
2 min read

அகம​தா​பாத்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் அகம​தா​பாத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணியை 89 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் 230 ரன்​கள் இலக்கை துரத்​திய சிஎஸ்கே அணி 13.4 ஓவர்​களில் 140 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. குஜ​ராத் அணி​யின் பந்​து​வீச்​சில் முகது சிராஜ், காகிசோ ரபா​டா, ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

குஜ​ராத் அணிக்கு இது 9-வது வெற்​றி​யாக அமைந்​தது. இதன் மூலம் அந்த அணி லீக் சுற்றை முதல் 2 இடங்​களுக்​குள் நிறைவு செய்​வதை உறுதி செய்​துள்​ளது. ஏனெனில் குஜ​ராத் அணி​யின் நிகர ரன் ரேட் 0.695 ஆக உள்​ளது. 14 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள குஜ​ராத் அணி 9 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 18 புள்​ளி​களு​டன் லீக் சுற்றை நிறைவு செய்​துள்​ளது.

அதேவேளை​யில் 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணி இந்த தோல்​வி​யால் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​தது. அந்த அணி 14 ஆட்​டங்​களில் 6 வெற்​றி, 8 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​களு​டன் லீக் சுற்றை முடித்​துள்​ளது.

சிஎஸ்கே அணிக்கு எதி​ரான வெற்​றிக்கு பின்​னர் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் சுழற்​பந்து வீச்​சாள​ரான ரஷித் கான் கூறிய​தாவது: ஒவ்​வொரு அணிக்​கும் மேம்​படுத்த வேண்​டிய சில சிறிய விஷ​யங்​களும் இருக்​கும், அதே நேரத்​தில் மிக​வும் வலு​வான சில பகு​தி​களும் இருக்​கும். எந்த அணி​யும் 100 சதவீதம் முழு​மை​யான, கச்​சித​மான அணி​யாக இருக்க முடி​யாது. உங்​களிடம் எவ்​வளவு சிறந்த வீரர்​கள் இருக்​கிறார்​கள் என்​பது முக்​கியமல்ல. இந்​தத் தொடர் முழு​வதும் எங்​களது நடு​வரிசை பேட்​டிங் குறித்து நிறைய விவாதங்​கள் நடந்​துள்​ளன.

ஆனால், இப்​போது ஒவ்​வொரு வீரரும் தங்​கள் பொறுப்பை உணர்ந்து சிறப்​பாகச் செயல்​பட்டு வரு​கிறார்​கள். ஒவ்​வொரு​வரும் தங்​களது பொறுப்பை ஏற்​றுக்​கொள்​கிறார்​கள், அது​தான் மிக​வும் முக்​கி​யம். துல்​லிய​மாக இல்​லாத அந்த 10 சதவீதம் அல்​லது 15 சதவீத விஷ​யங்​களைப் பற்​றியே சிந்​தித்​துக் கொண்​டிருந்​தால், அது மீத​முள்ள 70 முதல் 75 சதவீத அல்​லது 80 சதவீத விஷ​யங்​களை​யும் நிச்​ச​யம் பாதிக்​கும். எங்​களைப் பொறுத்​தவரை, நாங்​கள் விஷ​யங்​களை மிக​வும் எளிமை​யாக வைத்​திருக்​கிறோம்.

எதிரணி யாராக இருந்​தா​லும் சரி, களத்​தில் யாருக்கு வாய்ப்பு கிடைத்​தா​லும் சரி, எவ்​வாறு அதிக தாக்​கத்தை ஏற்​படுத்​தப் போகிறோம் என்​பது​தான் முக்​கி​யம். அது பேட்​டிங், பந்​து​வீச்சு அல்​லது ஃபீல்​டிங் என எது​வாக​வும் இருக்​கலாம். எனவே எங்கே பலவீன​மாக இருக்​கிறோம், எங்கே வலு​வாக இருக்​கிறோம் என்​ப​தைப் பற்றி அதி​கம் யோசிக்க வேண்​டாம். நமக்கு முன்​னால் என்ன இருக்​கிறது, அணிக்கு நான் எப்​படி சிறப்​பாகச் செய்ய முடி​யும் என்​ப​தைப் பற்றி மட்​டுமே யோசிக்க வேண்​டும்.

சிஎஸ்​கேவுக்கு எதி​ரான ஆட்​டத்​தின் போது ஆடு​களத்​தின் தன்மை மாற​வில்​லை. எங்​களு​டைய வேகப்​பந்து வீச்​சுப் பிரிவு, இந்​தத் தொடர் முழு​வதும் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறது. அகம​தா​பாத் ஆடு​களத்​தைப் பொறுத்​தவரை, நல்ல வேகத்​துடன் சரி​யான பகு​தி​யில் தொடர்ந்து பந்​து​வீசி​னால், பந்​து​வீச்​சாளர்​களுக்கு சாதக​மான விஷ​யம் இருக்​கும். அதே​போல், முதலில் பேட்​டிங் செய்து ரன்​களைக் குவிக்​கும் போது ஆடு​களத்​தின் சூழலைப் பார்த்​து​விட்டு அதற்கு தகுந்​தாற்​போல் விளை​யாட முயற்​சிக்க வேண்​டும்.

பந்​து​வீச்சு குழு​வாக​வும், பேட்​டிங் குழு​வாக​வும் ஆடு​களத்​தின் சூழலுக்கு ஏற்ப எங்​களை நாங்​கள் மிக விரை​வாக மாற்​றிக்​கொள்​கிறோம். இது​தான் இந்​தத் தொடர் முழு​வதும் எங்​களுக்​கான முக்​கிய பலமாக உள்​ளது. அந்த வகை​யில் சிஎஸ்கே அணி​யை​விட நாங்​கள் இந்த சூழலுக்​கும் ஆடு​களத்​துக்​கும் மிக விரை​வாக எங்​களை மாற்​றிக்​கொண்​டோம். நாங்​கள் மீண்​டும் வெற்றி பெற்​றதற்கு பின்​னணி​யில் இருக்​கும் காரணம் இது​தான்.

230 ரன்​கள் இலக்கை பாது​காக்​கும் போது பந்​து​வீச்​சில் ரன்​கள் செல்​லத்​தான் செய்​யும். ஆனால் ஒரு பந்​து​வீச்​சாள​ராக நான், ஒரு விஷ​யத்தை எப்​போதும் மாறாமல் வைத்​திருப்​பேன். அந்த வகை​யில் எதிரணி​யின் பேட்​ஸ்​மேன் பந்தை பவுண்​டரிக்கு அடிப்​பதை கடின​மாக​வும் சவாலாக​வும் மாற்ற முற்​சிப்​பேன்.

போட்​டி​யின் போது நல்ல நாட்​களும் இருக்​கும், மோச​மான நாட்​களும் இருக்​கும். மோச​மான நாட்​களி​லும் உங்​களை நீங்​கள் எப்​படி கையாள வேண்​டும் என்​பதை தெரிந்​திருக்க வேண்​டும். தொடர்ந்து சிறப்​பாகவே செயல்​பட்​டு, எந்​தவொரு மோச​மான நாளை​யும் சந்​திக்​க​வில்லை என்​றால், உங்​களால் நிறைய கற்​றுக்​கொள்ள முடி​யாது.

நான் விளை​யாடும் ஒவ்​வொரு போட்​டிக்​குப் பிறகும், பந்து வீசப்​பட்ட இடங்​களின் வரைபடத்தை எனக்கு அனுப்​பு​மாறு வீடியோ பகுப்​பாய்​வாளரிடம் கேட்​பேன். அதில் நான் அதி​கப்​படி​யான பந்​துகளை எங்கே வீசி​யிருக்​கிறேன், இன்​னும் எப்​படி சிறப்​பாகச் செயல்​படலாம் என்று பார்ப்​பேன்.

ஷுப்​மன் கில் ஒவ்​வொரு நாளும் தனது ஆட்​டத்​தில் முன்​னேற்​றம் அடைந்து வரு​கிறார். அவர், ஆடு​களத்​தின் சூழலுக்​கும் மைதானங்​களுக்​கும் ஏற்ப தன்னை மிக விரை​வாக மாற்​றிக்​கொள்​கிறார். அதோடு ஆட்​டத்​தை​யும் மிக விரை​வாகப் புரிந்​து​கொள்​கிறார்.

ஷுப்​மனிடம் இருக்​கும் சிறந்​த விஷ​யம்​ என்​னவென்​றால்​, அவருக்​குத்​ தன்​ ஆட்​டம்​ என்​னவென்​று நன்​றாகத்​ தெரி​யும்​. தனது இன்​னிங்​ஸை எப்​படித்​ தொடங்​க வேண்​டும்​, எப்​படி வேகப்​படுத்​த வேண்​டும்​, அதை எப்​படி முடிக்​க வேண்​டும்​ என்​பது அவருக்​குத்​ தெரி​யும்​. இவ்​​வாறு ரஷித்​ ​கான்​ கூறி​னார்​.

எந்த அணி​யும் 100% முழுமையானது இல்லை: மனம் திறக்கும் குஜ​ராத் அணியின் ரஷித் கான்
உலகளவில் அதிக வெப்பம் - இந்தியாவில் 97 நகரங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in