அகிப் நபி தனது பாணியை மாற்றக் கூடாது: சொல்கிறார் இர்பான் பதான்

அகிப் நபி தனது பாணியை மாற்றக் கூடாது: சொல்கிறார் இர்பான் பதான்
Updated on
2 min read

புதுடெல்லி: ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த வேகப்​பந்து வீச்​சாள​ரான அகிப் நபி, இலங்கை அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடருக்​கான இந்​திய அணி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். கடைசி நேரத்​தில் காயம் காரண​மாக ஜஸ்​பிரீத் பும்ரா வில​கிய​தால் அகிப் நபிக்கு வாய்ப்பு கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய டெஸ்ட் கிரிக்​கெட் அணிக்கு முதன்​முறை​யாக தேர்வு செய்​யப்​பட்​டுள்ள அகிப் நபி மீது மிகுந்த எதிர்​பார்ப்பு உள்​ளது.

அகிப் நபி​யின் திறமையை முதலில் கண்​டறிந்த பெருமை இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் ஆல்​ர​வுண்​ட​ரான இர்​பான் பதானையே சேரும். கடந்த 2018-ம் ஆண்டு ஜம்மு & காஷ்மீர் அணி​யின் ஆலோ​சக​ராக இருந்த இர்​பான் பதான் அணித் தேர்​வின் போது அகிப் நபி​யிடம் உள்ள திறன்​களை கண்​டறிந்து அவரது செயல்திறனை மேம்படுத்தினார்.

இது தொடர்​பாக இர்​பான் பதான் கூறிய​தாவது: பந்தை நகர்த்​து​வதற்கு ஏற்ற சரி​யான வேகம் மணிக்கு சுமார் 135 கி.மீ ஆகும். பந்தை ஸ்விங் செய்ய முடிந்​து, அது​வும் தாமத​மாகத் திருப்ப முடிந்​தது என்​றால் அவர்​தான் சிறந்த பந்​து​வீச்​சாளர். அகிப் நபி​யின் பந்​து​வீச்சு முறை மற்​றும் அவர், ஓடிவரும் சீரான வேகத்தை வைத்​துப் பார்க்​கும்​போது, அவரால் தொடர்ந்து மணிக்கு 133 முதல் 135 கி.மீ வேகத்தை எட்ட முடி​யும் என்று நம்​பு​கிறேன்.

முன்​னணி பேட்​டர்​கள் தடுப்​பாட்​டத்​தில் ஈடு​படும்​போதே அவர்​களை அவுட் ஆக்​கும் திறன் பந்​து​வீச்​சாளரிடம் இருக்க வேண்​டும். அது​தான் மற்​றொரு முக்​கிய​மான தகு​தி​யாகும். ரஞ்சி கோப்பை இறு​திப்​போட்​டி​யில் கே.எல்​.​ராகுலுக்கு அகிப் நபி தனது பந்​து​வீச்​சால் அழுத்​தம் கொடுத்​தார். அவருக்கு அந்த நேரத்​தில் விக்​கெட் கிடைக்க​வில்​லை. ஆனால் கே.எல்​.​ராகுல் தடுப்​பாட்​டம் விளை​யாடிய போது அவுட் ஆனார்.

மும்​பை​யில் நடை​பெற்ற போட்​டி​யில் ஸ்ரேயஸ் ஐயர் மற்​றும் தற்​போதைய முன்​னணி வீரர்​களுக்கு எதி​ராக அகிப் நபி பந்​து​வீசி​யதை நான் பார்த்​தேன். அவர்​களை​யும் அவர், அதே முறை​யில்​தான் அவுட் செய்​தார். எனவே, வெவ்​வேறு ஆடு​களங்​களி​லும் உயர்தர பேட்​டர்​கள் தடுப்​பாட்​டத்​தில் ஈடு​படும்​போது அவுட் ஆகிறார்​கள் என்​றால், அகிப் நபி​யிடம் அந்​தத் திறன் இருக்​கிறது என்​று​தான் அர்த்​தம்.

அகிப் நபியை நான் முதன்​முதலில் சந்​தித்​த​போது அவரிடம் நான் கூறியது ஒன்றே ஒன்​று​தான். யார் என்ன சொன்​னாலும் சரி, உன்​னுடைய பந்​து​வீச்சு முறையை மட்​டும் எப்​போதும் மாற்​றாதே என்று கூறினேன். வேகத்தை அதி​கரிக்​கச் சொல்​லிப் பலரும் பல விஷ​யங்​களைக் கூறு​வார்​கள். பந்​து​வீ​சாத மற்​றொரு கையின் அமைப்​பைப் பற்​றிப் பலரும் பல யோசனை​களைச் சொல்​வார்​கள்.

ஆனால், உன் பந்​து​வீச்சு பாணியை மட்​டும் மாற்​றவே மாற்​றாதே என அவரிடம் தெளி​வாகக்​கூறி உள்​ளேன். ஏனெனில் இந்த பந்​து​வீச்சு முறை​யில்​தான் பந்​தின் தையல் பகுதி நேராக விழுகிறது. அவர், தன்​னுடைய பாணியை மாற்​றி​னால், அந்த நேரான சீம் அமைப்பு இல்​லாமல் போய்​விடும். அது நின்​று​போ​னால், அவரது பந்​து​வீச்​சின் திறமையே முடிவுக்​கு வந்​து​விடும்​. இவ்​வாறு இர்​பான்​ ப​தான்​ கூறினார்.

அகிப் நபி தனது பாணியை மாற்றக் கூடாது: சொல்கிறார் இர்பான் பதான்
கொழும்பு சென்றடைந்தது இந்திய கிரிக்கெட் அணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in