

சென்னை: சென்னை கால்பந்து சங்கம் (சிஎப்ஏ) - திலக் மோதி யுசி பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்துப் போட்டியில் ஜிஎம்டிடிவி மேல்நிலைப்பள்ளி அணி கோப்பையை வென்றது.
இந்தப் போட்டி சென்னை கண்ணப்பர் திடலில் நேற்று நடைபெற்றது. இறுதிப் போட்டியில் ஜிஎம்டிடிவி மேல்நிலைப்பள்ளி அணியும், செயின் பீட்ஸ் ஏஐ மேல்நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் ஜிஎம்டிடிவி மேல்நிலைப்பள்ளி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.