

குவாஹாட்டி: குவாஹாட்டி மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சன்ஸ்கார் சரஸ்வத் சாம்பியன் பட்டம் வென்றார்.
குவாஹாட்டியில் இந்த போட்டி நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் சன்ஸ்கார் சரஸ்வத் 21-11, 17-21, 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் சக நாட்டு வீரர் மிதுன் மஞ்சுநாத்தை வீழ்த்தினார்.
மகளிர் பிரிவில் சீன தைபே வீராங்கனை துங் சியோ - தாங் 21-18, 21-8 என்ற கணக்கில் இந்திய வீராங்கனை தன்வி சர்மாவை வென்றார்.