

சென்னை: ஹாக்கி இந்தியா லீக் தொடரில் பங்கேற்கும் அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் அறிமுக விழா, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.
விழாவில், அணியின் உரிமையாளரும், பாரத் பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஸ்வேதா சந்தீப் ஆனந்த் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அணியின் அதிகாரப்பூர்வ சின்னம், அணி வீரர்கள் அணியும் புதிய சீருடை ஆகியவை வெளியிடப்பட்டன.
ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் ‘வியூகம் மற்றும் திட்டமிடல்’ ஆலோசனைக் குழுவின் தலைவரும், அக்கார்டு குழுமத்தின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் சந்தீப் ஆனந்த், ஹாக்கி இந்தியாவின் பொருளாளரும் தமிழ்நாடு ஹாக்கி அமைப்பின் தலைவருமான சேகர் மனோகரன், அணியின் உதவி பயிற்சியாளர் விக்ரம் காந்த், அக்கார்டு தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் முதன்மை செயல் அதிகாரி ஜோசப் மற்றும் அணியின் கேப்டன் அமித் ரோஹிதாஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.