3-வது இடத்​துக்​கான ஆட்டத்தில் கோல் மழை - பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து | FIFA WC 2026

3-வது இடத்​துக்​கான ஆட்டத்தில் கோல் மழை - பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து | FIFA WC 2026
Updated on
3 min read

மியாமி: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின் 3-ம் இடத்​துக்​கான ஆட்​டத்​தில் கோல் மழை பொழிந்​தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 6-4 என்ற கோல் கணக்​கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி 3-வது இடத்​தைப் பிடித்​துள்​ளது.

23-வது உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்டி அமெரிக்​கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடு​களில் நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று அதி​காலை 12.30 மணிக்கு மியாமி​யில் நடை​பெற்ற 3-வது இடத்​துக்​கான ஆட்​டத்​தில் பிரான்​ஸ், இங்கிலாந்து அணி​கள் மோதின. ஆட்​டத்​தின் தொடக்​கம் முதலே இங்​கிலாந்து வீரர்​கள் தாக்​குதல் ஆட்​டத்​தைத் தொடங்கி பிரான்ஸ் அணிக்கு கடும் நெருக்​குதலைக் கொடுத்​தனர்.

இங்​கிலாந்து அணிக்கு 3-வது நிமிடத்​திலேயே முதல் கோல் கிடைத்​தது. இந்த கோலை இங்​கிலாந்து வீரர் டெக்​லான் ரைஸ் அடித்து கோல் கணக்​கைத் தொடங்கி வைத்​தார். இதனால் பிரான்ஸ் வீரர்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். அந்த அதிர்ச்​சியி​லிருந்து பிரான்ஸ் அணி மீள்​வதற்​குள் 2-வது கோலை​யும் இங்​கிலாந்து அடித்​தது. ஆட்​டத்​தின் 18-வது நிமிடத்​தில் இங்​கிலாந்து அணி​யின் எஸ்ரி கோன்சா அந்த கோலை அடித்​தார். இதனால், 2-0 என்ற கோல் கணக்​கில் இங்​கிலாந்து முன்​னிலை பெற்​றது.

பிரான்ஸ் அணி வீரர்​கள் கோல் கம்​பத்தை நோக்கி அடித்த பந்​துகளை இங்​கிலாந்து கோல்​கீப்​பர் லாவக​மாக தடுத்​தார். இந்​நிலை​யில் இங்​கிலாந்து வீரர் புகாயோ சாகா 37-வது நிமிடத்​தில் ஒரு கோலடித்​தார். இதனால் 3-0 என்ற கணக்​கில் இங்​கிலாந்து அணி முன்​னிலை பெற்​றது. இதைத் தொடர்ந்து 45+1 நிமிடத்​தில் மற்​றுமொரு கோல் அடித்து அசத்​தி​னார் புகாயோ சாகா. இதனால் முதல் பாதி முடி​வில் இங்​கிலாந்து 4-0 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை​யில் இருந்​தது. முதல் பாதி​யிலேயே 4 கோல்​களை இங்​கிலாந்து வீரர்​கள் அடித்​த​தால் பிரான்ஸ் அணி நிலைகுலைந்து போனது.

இதையடுத்து 2-வது பாதி ஆட்​டம் தொடங்​கியதும் பிரான்ஸ் அணி வீரர் தீவிர தாக்​குதல் ஆட்​டத்​தைத் தொடங்​கினர். இதன்​மூலம் அந்த அணிக்கு பலன் கிடைத்​தது. ஆட்​டத்​தின் 48-வது நிமிடத்​தில் பிரான்ஸ் வீரர் கிலியன் எம்​பாப்பே தனது முதல் கோலை பதிவு செய்​தார். இதனால் 4-1 என்ற கணக்​கில் முன்​னிலை குறைந்​தது. அதற்​கடுத்த 6-வது நிமிடத்​திலேயே மற்​றொரு கோலை பிரான்ஸ் அடித்​தது. பிரான்ஸ் அணிக்​காக 54-வது நிமிடத்​தில் பிராட்லி பார்​கோலா இந்த இரண்​டாவது கோலை அடித்​தார்.

இந்​நிலை​யில் இந்​தப் போட்​டி​யில் தனது 2-வது கோலை அடித்​தார் கிலியன் எம்​பாப்​பே. 66-வது நிமிடத்​தில் இந்த கோல் விழுந்​தது. இதனால் 3-4 என்ற கணக்​கில் பின்​தங்​கி​யிருந்​தா​லும், போட்டி பரபரப்​பான கட்​டத்​துக்கு சென்​றது. ஆட்​டம் முடிய 3 நிமிடங்​கள் இருந்​த​போது பாக்ஸ் பகு​தி​யில் இங்​கிலாந்து வீரரை, பிரான்ஸ் வீரர் தட்​டி​விட இங்​கிலாந்​துக்கு பெனல்டி வாய்ப்பு கிடைத்​தது. 87-வது நிமிடத்​தில் கிடைத்த இந்த பெனல்டி வாய்ப்பை அரு​மை​யான கோலாக மாற்​றி​னார் புகாயோ சாகா.

இதன்​மூலம் இங்​கிலாந்​துக்​காக ஹாட்​ரிக் கோலைப் பதிவு செய்​தார் சாகா. இந்​தப் போட்​டி​யில் இது அவருக்கு 3-வது கோலாக​வும், இந்த உலகக் கோப்​பை​யில் 5-வது கோலாக​வும் அமைந்​தது. இதனால் இங்​கிலாந்து 5-3 என்ற கணக்​கில் முன்​னிலை பெற்​றது. இதையடுத்து காயத்​துக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட கூடு​தல் நேரத்​தில் பிரான்ஸ் மற்​றொரு கோலை அடித்​தது.

90+4 -வது நிமிடத்​தில் பிரான்ஸ் வீரர்

உஸ்​மான் டெம்​பலே இந்த கோலை அடித்​தார். இதனால் முன்​னிலை 5-4 ஆக குறைந்​தது. இதனால் ஆட்​டத்​தில் மீண்​டும் பரபரப்பு தொற்​றிக் கொண்​டது. ஆனாலும், இங்​கிலாந்து வீரர்​கள் தொடர்ந்து தாக்​குதல் ஆட்​டத்தை வெளிப்​படுத்​தி, 6-வது கோலை அடித்​தனர்.

90+8-வது நிமிடத்​தில் இங்​கிலாந்​தின் ஜுட் பெல்​லிங்​ஹாம் 6-வது கோலை​யடித்து இங்​கிலாந்து அணி​யின் வெற்​றியை உறுதி செய்​தா​ர்​. ஆட்​டம்​ முடி​யும்​ வரை பி​ரான்​ஸ்​ வீரர்​கள்​ போ​ராடி​யும்​ கோலடிக்​க முடிய​வில்​லை. இதையடுத்​து இங்​கிலாந்​து 6-4 என்​ற கோல்​ கணக்​கில்​ பி​ரான்​ஸை வீழ்​த்​தி 3-வது இடத்​தை பிடித்​தது.

இங்கிலாந்துக்கு ரூ.279 கோடி பரிசு

வெண்கலம் வென்ற இங்கிலாந்துக்கு அணிக்கு சுமார் ரூ.279 கோடியும், 4-வது இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு சுமார் ரூ.259 கோடியும் பரிசாக கிடைத்துள்ளது.

ஜூட் பெல்​லிங்​ஹாம் சாதனை

இங்​கிலாந்து கால்​பந்து அணிக்​காக ஓர் உலகக் கோப்பை போட்​டி​யில் அதிக கோல்​களை அடித்த வீரர் என்ற பெரு​மையை நடுகள ஆட்​டக்​காரர் ஜூட் பெல்​லிங்​ஹாம் பெற்​றார். இந்த உலகக் கோப்பை போட்​டி​யில் அவர் 7 கோல்​களை அடித்​து சாதித்துள்ளார்.

அதே​போல் இங்​கிலாந்து வீரர் புகாயோ சாகா, இந்த உலகக் கோப்பை போட்​டி​யின் 300-வது கோலை அடித்​தார். மேலும், இங்​கிலாந்து அணிக்​காக ஹாட்​ரிக் கோல்​கள் அடித்த 2-வது வீரர் என்ற பெரு​மை​யை​யும் புகாயோ சாகா பெற்​றார். இதற்கு முன்பு 1966-ல் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் இங்​கிலாந்து வீரர் சர் ஜெஃப் ஹர்​ஸ்ட் ஹாட்​ரிக் கோல்​கள் அடித்து சாதனை படைத்​திருந்​தார்.

உலகக் கோப்​பை​யில் 22 கோல்​கள் எம்​பாப்பே சாதனை

பிரான்ஸ் வீரர் கிலியன் எம்​பாப்பே உலகக் கோப்பை போட்டிகளில் 22 கோல்​களை அடித்து அதிக கோல்​களை அடித்த வீரர் என்ற சாதனையைச் செய்​துள்​ளார். 27 வயதான எம்​பாப்பே நேற்​றைய போட்​டி​யின்​போது 2 கோல்​களை அடித்​தார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்​றிலேயே அதிக கோல்​கள் அடித்த வீரர்​கள் பட்​டியலில் 22 கோல்​களு​டன் அவர் முதலிடத்தை பிடித்​துள்​ளார். இரண்​டாம் இடத்​தில் 21 கோல்​களு​டன் அர்ஜெண்டினா​வின் 39 வயதான மெஸ்ஸி உள்​ளார்.

மெஸ்​ஸியை முந்​தி​னார்

மேலும் இந்த உலகக் கோப்​பை​யில் அர்​ஜெண்​டினா வீரர் மெஸ்ஸியை, கிலியன் எம்​பாப்பே முந்​தி​யுள்​ளார். நேற்று அவர் 2 கோல்​களை அடித்து சாதனை புரிந்​தார். இதன்​மூலம் நடப்பு உலகக் கோப்​பை​யில் கோல்​டன் பூட் விருது பெறு​வதற்​கான போட்​டி​யில் கிலியன் எம்​பாப்பே முதலிடத்​திற்கு முன்​னேறி உள்ளார்.

அவர் இது​வரை 10 கோல்​கள் அடித்​தும், 4 கோல்​களை அடிக்க உதவி செய்​தும் முதலிடத்​தைப் பெற்​றுள்​ளார். நேற்​றைய போட்டிக்கு முன்​ன​தாக மெஸ்​ஸி, எம்​பாப்பே இரு​வரும் தலா 8 கோல்​கள் அடித்து சமநிலை​யில் இருந்​தனர்.இந்​நிலை​யில் 2 கோல்​களை அடித்து மெஸ்​ஸியை முந்​தி​யுள்​ளார்

எம்​பாப்​பே. அர்​ஜெண்​டினா கேப்​டன் லயோனல் மெஸ்ஸி தற்போது 8 கோல்​களை அடித்​தும், 4 கோல்​களை அடிக்க உதவி செய்​தும் 2-வது இடத்​தில் பின்​தங்கி உள்​ளார். மெஸ்​ஸி, கோல்​டன் பூட் விருதைப் பெற வேண்​டும் என்​றால் இன்​றைய ஆட்​டத்​தில் மேலும் 2 கோல்​களை அடிக்​கவேண்​டும்.

10 கோல்கள்

உலகக் கோப்பை கால்​பந்​துப் போட்​டி​யின், வெண்கல பதக்கத்துக்​கான போட்​டி(3-வது இடம்) படு சுவாரசிய​மாக​வும், விறு​விறுப்​பாக​வும் நடை​பெற்று முடிந்​தது. இந்​தப் போட்​டி​யின்​போது மொத்​தம் 10 கோல்​கள் அடிக்​கப்​பட்​டன.

இறுதிப் போட்டிக்குப் பின் மெஸ்ஸி ஓய்வு?

ஸ்பெயின் அணியுடனான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்குப் பின்னர் அர்ஜெண்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி ஓய்வு முடிவை அறிவிப்பார் எனத் தெரிகிறது. இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெஸ்ஸி வெளியிட்ட ஒரு உருக்கமானப் பதிவே இந்த யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அதில் மெஸ்ஸி கூறும்போது, “எனது சக வீரர்கள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் இந்த தேசிய அணியை ஒரு குடும்பமாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கும் அனைவருக்கும் எனது நன்றி. நாளை என்ன நடந்தாலும், இந்த குழு ஏற்கனவே யாராலும் மறக்க முடியாத, அழிக்க முடியாத ஒரு வரலாற்றை எழுதிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2006 முதல் தற்போது வரையிலான சில புகைப்படங்களையும், அர்ஜெண்டினா அணியினருடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் மெஸ்ஸி பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவுகளே ரசிகர்களிடம் மெஸ்ஸி ஓய்வு தொடர்பான யூகத்துக்கு வழிவகுத்துள்ளது.

3-வது இடத்​துக்​கான ஆட்டத்தில் கோல் மழை - பிரான்ஸை வீழ்த்தியது இங்கிலாந்து | FIFA WC 2026
அர்ஜெண்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக சாம்பியன் ஆனது ஸ்பெயின் | FIFA WC 2026 Final

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in