ஐசிசி டி20 போட்டியில் பங்கேற்க வங்கதேசம் மறுப்பு: பிரச்சினையை தீர்க்க தமிம் இக்பால் வேண்டுகோள்

ஐசிசி டி20 போட்டியில் பங்கேற்க வங்கதேசம் மறுப்பு: பிரச்சினையை தீர்க்க தமிம் இக்பால் வேண்டுகோள்
Updated on
1 min read

டாக்கா: கிரிக்​கெட் விளை​யாட்​டின் நலனைக் கருத்​தில் கொண்டு பிரச்​சினையை தீர்க்க வங்​கதேச வாரி​யம் முன்வர வேண்​டும் என்று வங்​கதேச கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் தமிம் இக்பால் வேண்​டு​கோள் விடுத்துள்​ளார்.

வங்​கதேசத்​தில் நடை​பெற்ற இந்​துக்​கள் மீதான தாக்​குதல் சம்​பவம் கிரிக்​கெட்​டிலும் எதிரொலித்து வரு​கிறது. தாக்குதல் சம்​பவத்​தால் கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) ஐபிஎல் அணி​யில் இடம்​பெற்​றுள்ள வங்​கதேச வீரர் முஸ்​டாபிஸுர் ரஹ்​மானை நீக்​கவேண்​டும் என்று பாஜக, சிவசேனா, இந்து அமைப்​பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பிசிசிஐ உத்​தர​வின் பேரில் அவர் கேகேஆர் அணியி​லிருந்து விடுவிக்​கப்​பட்​டார். இந்நிலை​யில், இதற்கு பதிலடி கொடுக்​கும் வகை​யில் இந்​தி​யா​வில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை​யில் விளை​யாட வங்கதேசம் மறுத்​து​விட்​டது. பாது​காப்பு கருதி தங்​கள் அணி மோதும் ஆட்​டங்​களை இலங்​கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசி-​யிடம் வலி​யுறுத்​தி​யுள்​ளது. ஆனால், வங்​கதேசத்​தின் இந்​தக் கோரிக்​கையை ஐசிசி நிராகரித்​து​விட்​டது.

மேலும், ஐசிசி டி20 உலகக்​கோப்பை போட்​டிகளை இந்தியா​வில்​தான் வங்​கதேச அணி விளை​யாட வேண்டும். இல்லை​யென்​றால் அந்த அணி புள்​ளி​களை இழக்க நேரிடும் என்று வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யத்தை ஐசிசி எச்சரிக்கை செய்​துள்​ளது. ஆனால், உலகக் கோப்பைப் போட்டியை இந்​தி​யா​வில் விளை​யாட மாட்டோம் என வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் தொடர்ந்து அடம்​பிடித்து வருகிறது.

பிப்​ர​வரி 7-ம் தேதி தொடங்​க​வுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்​பை​யில், வங்​கதேச அணி தனது லீக் ஆட்​டங்​களை இந்​தி​யா​வின் கொல்​கத்தா மற்​றும் மும்​பை​யில் விளையாட அட்​ட​வணை தயார் செய்​யப்​பட்​டுள்​ளது. ஆனால், பாது​காப்பு காரணங்​களுக்​காக இந்​தியா வர வங்​கதேசம் மறுத்து வரு​கிறது.

இந்​நிலை​யில் கிரிக்​கெட் விளை​யாட்​டின் நலனைக் கருத்​தில் கொண்டு பிரச்​சினையை தீர்க்க வங்​கதேச வாரி​யம் முன்வர வேண்​டும் என்று வங்​கதேச அணி​யின் முன்​னாள் கேப்​டன் தமிம் இக்​பால் வேண்டுகோள் விடுத்​தார்.

டாக்​கா​வில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொண்ட பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியதாவது: முஸ்​டாபிஸுர் ரஹ்​மான் ஐபிஎல் கொல்​கத்தா அணியி​லிருந்து நீக்​கப்​பட்ட விவகாரத்தை பேசித் தீர்க்கலாம். வங்​கதேச நாட்​டில் ஏராள​மான கிரிக்​கெட் ரசிகர்​கள் உள்​ளனர். புதிது புதி​தாக கிரிக்​கெட் வீரர்​கள் உருவாகி வரு​கின்​றனர். கிரிக்​கெட்​டில் வங்​கதேசம் வேகமாக வளர்ச்சி பெற்று வரு​கிறது.

நமது நாட்​டின் கிரிக்​கெட் எதிர்​காலத்​தைக் கருத்​தில் கொண்டு வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் இந்தப் பிரச்சினை குறித்து சிந்​திக்க வேண்​டும். இது​போன்று முடிவு எடுக்​கும் முன்பு அனைவரையும் கலந்​தாலோ​சித்து முடிவு எடுத்​திருக்​கலாம்.பேச்​சு​வார்த்தை மூலம் இந்​தப் பிரச்சினையைத் தீர்க்க வங்​கதேச கிரிக்​கெட் வாரி​யம் முன்​வர​வேண்​டும்.

இது ஓர் உணர்ச்​சிகர​மான பிரச்​சினை என்​ப​தால் நான் கருத்து தெரிவிக்​காமல்​ இருந்​து வந்​தேன்​. இந்​தப்​ பிரச்சினையை வங்​கதேச கிரிக்​கெட்​ ​வாரிய நிர்வாகிகளுக்குள்​ பேசித்​ தீர்​க்​க வேண்​டும்​ என்​று விரும்புகிறேன்​. இவ்வாறு அவர்​ தெரிவித்​​தார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in