

அர்ஜுன் எரிகைசி
கோவா: ஃபிடே செஸ் உலகக் கோப்பை தொடர் கோவாவில் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜுன் எரிகைசி, சீனாவின் வெய் யியுடன் மோதினார். இவர்கள் மோதிய 2 ஆட்டங்களும் டிராவில் முடிவடைந்திருந்தன. இதனால் வெற்றியை தீர்மானிக்க நேற்று டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்பட்டது.
இதன் முதல் ஆட்டம் 66-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதையடுத்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 79-வது நகர்த்தலின் போது வெய் யி, சிப்பாயை ராணியாக பிரமோட் செய்தார். இதனால் அர்ஜுன் எரிகைசி தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இத்துடன் உலக கோப்பை தொடரில் இந்திய வீரர்களின் செயல் திறன் முடிவுக்கு வந்தது.