

அகமதாபாத்: ஒவ்வொரு மெய்யான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத நினைவாக அமைந்தது நடப்பு சீசனில் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி.
‘இதெல்லாம் ஒரு டீமா?, சொத்தையான ஃபேஸ் பவுலர்ஸ், டீமுக்குள்ள பாலிட்டிக்ஸ் நடக்குதாமே?’ என சிஎஸ்கேவை பலரும் விமர்சித்தனர். ஆனால், சிஎஸ்கே கைவசம் இருந்தது தோனி எனும் தலைவன், அவர் இடும் கட்டளையை நிறைவேற்றும் தளபதிகள் (அணி வீரர்கள்) மற்றும் அன்பான ரசிகர்கள். அதை வைத்தே முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதோ பட்டமும் வென்று விட்டது. நடப்பு சீசனின் இறுதிப் போட்டியின்போது களத்தில் நடைபெற்ற உணர்ச்சி மிகு தருணங்கள்...