Last Updated : 28 Oct, 2017 10:21 AM

 

Published : 28 Oct 2017 10:21 AM
Last Updated : 28 Oct 2017 10:21 AM

உலக துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம்

ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர்கள் சங்க்ராம் தகியா, அமன்பிரீத் சிங் பதக்கம் வென்றனர்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அமன் பிரீத் சிங் 202.2 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். செர்பியாவின் தமிர் மைக் 229.3 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கமும், உக்ரைனின் ஓமெல்சவுக் 228 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் சங்க்ராம் தகியா 76 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் ஹூ பினுயன் 79 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், இத்தாலியின் கஸ்பரானி தவி வெண்கலமும் பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x