

மும்பை: சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த ஐபிஎல் தொடரில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா சரியாக விளையாடவில்லை. அவருடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தைப் பார்க்க முடியவில்லை. அவருடைய மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பம் இருக்கிறது. எனவே அதற்கு ஒரே தீர்வாக ஒரு சில போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் களமிறங்க வேண்டும். அப்படி செய்தால் அவர் அதிக ரன்களை எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.