Published : 23 Sep 2017 10:06 AM
Last Updated : 23 Sep 2017 10:06 AM

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் நவம்பர் 17-ல் தொடக்கம்: முதல் ஆட்டத்தில் கொல்கத்தா - கேரளா மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 4-வது சீசன் வரும் நவம்பர் 17-ல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

இம்முறை பெங்களூரு எப்சி, ஜாம்ஷெட்பூர் எப்சி ஆகிய இரு அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 90 லீக் ஆட்டங்கள் நடைபெறும். அரை இறுதி ஆட்டங்கள் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 2-வது வாரம் நடைபெறுகிறது. இதற்கான தேதி மற்றும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன் முதல் சனிக்கிழமை வரையிலான ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு நடத்தப்படும்.

ஞாயிற்றுக்கிழமை இரு ஆட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மாலை 5.30 மணிக்கு முதல் ஆட்டமும், இரவு 8 மணிக்கு 2-வது ஆட்டமும் நடைபெறும். தொடரின் முதல் ஞாயிற்றுக்கிழமையில் (நவம்பர் 19-ம் தேதி) சென்னையின் எப்சி, எப்சி கோவா அணிகளும் பெங்களூரு எப்சி - மும்பை சிட்டி எப்சி அணிகளும் மோதுகின்றன.

இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 10 கிளப்களும் இந்த சீசனுக்காக 77 சர்வதேச வீரர்கள், 166 உள்ளூர் வீரர்களை சுமார் ரூ.132.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன. இம்முறை விளையாடும் லெவனில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 6-ல் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x