Published : 23 Sep 2017 10:04 AM
Last Updated : 23 Sep 2017 10:04 AM

தோனியால்தான் சாத்தியம்: குல்தீப் யாதவ் கருத்து

ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியது தோனியால்தான் சாத்தியப்பட்டதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீவ் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

குல்தீவ் யாதவ் கூறும்போது, “ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றுவேன் என கனவிலும் நினைக்கவில்லை. ஆரம்பக்கட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் பந்துகளை வீச தடுமாறினேன். கடந்த ஆட்டத்தில் எனது பந்து வீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசப்பட்டன. இந்த ஆட்டத்திலும் மேக்ஸ்வெல் சிக்ஸர் அடித்த போது தோனியிடம் ஆலோசனை கேட்டேன். அதற்கு அவர், உனக்கு என்ன தோன்றுகிறதோ அப்படியே பந்து வீசு எனக் கூறினார். அதன்படியே செயல்பட்டேன். அடுத்தடுத்து 2 விக்கெட்கள் கைப்பற்றினாலும், தோனியால்தான் ஹாட்ரிக் சாதனை சாத்தியமானது” என்றார்.

இந்நிலையில் ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப் யாதவுக்கு முன்னாள் வீரர்களான சச்சின், கங்குலி, காம்பீர், முகமது கைஃப் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x