Published : 16 Sep 2017 10:32 AM
Last Updated : 16 Sep 2017 10:32 AM

ஹைதராபாத் சாம்பியன்

புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் டிஎன்சிஏ தலைவர் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது.

சென்னை எஸ்எஸ்என் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டிஎன்சிஏ தலைவர் லெவன் 200 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வாஷிங்டன் சுந்தர் 45 ரன்கள் சேர்த்தார். 201 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஹைதராபாத் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 56.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. சுமந்த் 77, ரோஹித் ராயுடு 47 ரன்கள் சேர்த்தனர். ஹைதராபாத் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x