Published : 14 Sep 2017 04:51 PM
Last Updated : 14 Sep 2017 04:51 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரில் முதல் 3 போட்டிகளிலிருந்து தொடக்க வீரர் ஷிகர் தவண் விலகியுள்ளதாக பிசிசிஐ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மனைவி உடல்நலம் சரியில்லாததால் அவர் விடுப்புக் கேட்டுச் சென்றுள்ளதாக பிசிசிஐ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் தவணுக்கு மாற்று வீரரை இந்திய அணி அறிவிக்கப்போவதில்லை. காரணம் ஏற்கெனவே 16 வீரர்கள் கொண்ட அணியில் கே.எல்.ராகுல், ரஹானே ஆகிய தொடக்க வீரர்கள் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான டி20 போட்டியின் போது தன் தாயாருக்கு உடல் நிலை சரியில்லை என்று தவண் விடுப்பு பெற்றார். தற்போது மனைவி உடல் நலம் காரணமாக 3 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
தொடக்கத்தில் அனுபவ வீரர் ரஹானேயை இறக்குவார்களா அல்லது மிடில் ஆர்டரில் சொதப்புவதால் ரோஹித் சர்மாவுடம் கே.எல்.ராகுலை அனுப்புவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT